‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்................. நமதூரிலும் நமதூரைச்சுற்றியும் நடந்த மற்றும் நடைபெறயுள்ள நிகழ்வுகளை எங்களுக்கு அனுப்பித்தந்தால் அதை அன்புடன் வெளியிட காத்திருக்கிறோம்.இந்த தளத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை அன்போடு வரவேற்கிறோம்.

Wednesday 31 October 2012

பெரு நாள் வாழ்த்து ‘ஈத் முபாரக்’ சொல்லலாமா?...

பெருநாள் தினத்தில் ஒருவருக்கொருவர் ஈத் முபாரக் என்று சொல்லும் வழக்கம் சமுதாயத்தில் பரவி வருகிறது.
இது இஸ்லாத்தின் முக்கியமான ஒரு நபிவழி என்பது போல் மக்களால் கருதப்படுகிறது.

ஒருவர் தனது தாய் மொழியில் தனக்கு விருப்பமான சொற்களைப் பயன்படுத்தி குர்ஆன் ஹதீசுக்கு முரணில்லாத வகையில் துஆச் செய்யும் வகையில் வாழ்த்துவது தவறில்லை.
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் மகிழ்ச்சியைத் தரட்டும் என்றெல்லாம் கூறுவதில் மறுப்பு இல்லை.

ஆனால் குறிப்பிட்ட ஒரு சொல்லை அனைவரும் சொல்ல வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்துவது என்றால் அது அல்லாஹ்வுக்கும்
அவனது தூதருக்கும் மட்டும் உள்ள அதிகாரமாகும்.

ஈத் முபாரக் என்ற சொல்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு தடவை கூட பயன்படுத்தியதில்லை.
அவர்கள் பயன்படுத்தாத இச்சொல்லை அவர்கள் பயன்படுத்தினார்கள் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அதை ஒரு சுன்னத் போல் ஆக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) சொல்லித் தந்தவைகளை மட்டும் தான் அப்படியே அரபு மொழியில் சொல்ல வேண்டும். மற்ற விஷயங்கள் அவரவர் தாய் மொழியில் தான் இருக்க வேண்டும்.

Tuesday 30 October 2012

தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி?

மொபைல் போன்கள் நமக்கு மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்ட இந்த் காலத்தில் அவற்றை பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இதில் மிக முக்கியமாக தண்ணீரில் விழுந்த போனை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம்.

சிலர் போன் தண்ணீரில் விழுந்த உடன் அவசர அவசரமாக ரெண்டு உதறு உதறி விட்டு உடனே ஆன் செய்து விடுவார்கள்.இதை மட்டும் நீங்கள் செய்யவே கூடாது.

உங்கள் போனில் இருந்து பாட்டரி, சிம்கார்ட் ,மெமரி கார்டு ஆகியவற்றை முதலில் கழட்டி விடவும். பின்னர் துணி அல்லது டிஸ்யூ பேப்பர் கொண்டு வெளி பாகங்களை துடைக்கவும்.

உங்கள் வீட்டில் Vaccum cleaner இருந்தால் அதனை Suction mode இல் வைத்து இப்போது உங்கள் போனை காட்டவும் இதனால் தண்ணீர் ஆவியாகி விடும்.

Vacuum cleaner இல்லை என்றால் கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் அரிசி

புயலின் எச்சரிக்கைகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் ..!

புயல் எச்சரிக்கைகளின் அர்த்தம்
 
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வருவதால் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது. தொலைக்காட்சிகளிலும் வானிலை அறிவிப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் புயல் எச்சரிக்கை பற்றி கூறப்படும் சில குரியீட்டு எண்கள் பொதுமக்களில் ...
பலருக்கு இன்றளவும் விளங்கமலேயே இருக்கின்றது.
பொதுமக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்க துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் கூண்டுகளையும், அந்த குறியீடுகள் குறித்த விளக்கங்களின் விபரம் பின்வருமாறு :
ஒன்றாம் எண் எச்சரிக்கையால், புயல் உருவாகக்கூடிய வானிலைப் பகுதி ஒன்று ஏற்பட்டுள்ளது என அர்த்தம். இரண்டாம் எண், புயல் உருவாகியுள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது. மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.

மரணம் - பொய்க்கும் நாத்திகம்....!!!!

நேத்து வரைக்கும் நல்லாதானே இருந்தாரு...இன்னைக்கு பொசுக்குனு போய்ட்டாரு....

அட! காலையிலே தானே பாத்தேன்....அடடா...அதுகுள்ள என்னாச்சி அவருக்கு...

நைட் நல்லாதாங்க படுக்க போனாரு... காலையிலே பாத்தா...

சராசரி மனிதர்கள் வாயில் அன்றாடம் வலம் வரும் வார்த்தைகள் தான் இவை. சாதாரணமாக தெரியும் இவ்வெளிய வார்த்தைகளுக்குள் நாத்திகம் பதில் தர மறக்கும்/மறுக்கும் அனேக உண்மைகள் உறங்கிக்கொண்டிருக்கிறது... தட்டியெழுப்ப ட்ரை பண்ணுவோம்.

மரணம்: -

நாம் விரும்பினாலும்-விரும்பாவிட்டாலும் நம்மை வந்தடைவது உறுதி என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அப்படிப்பட்ட மரணம், மனிதன் உட்பட எல்லா உயிர்க்கும் பொதுவாக நிகழ்ந்தாலும் அஃது ஒரே மாதிரி நிகழ்வதில்லை என்பது தான் இவ்வாக்கத்தின் மையக்கருத்து.

அதற்கு முன்பாக, மரணம் குறித்து விக்கிபீடியா என்ன விளக்கம் தருகின்றது என்பதை பார்த்துவிடுவோம்.

இதுதான் புரட்சி!...

ஆம். அது ஒரு மாபெரும் புரட்சி!...

உலகம் இதுவரை கண்டிராத புரட்சி இருபத்தி மூன்றாண்டு கால புரட்சி...

ஆம். அது ஒரு மாபெரும் புரட்சி!...

இனி அவர்கள் பல கடவுள்களை வணங்க மாட்டார்கள் தங்களின் நாயன் ஒருவனே என்று உணர்ந்தவர்கள்...

ஆம். அது ஒரு மாபெரும் புரட்சி!...

இனி அவர்கள் கொள்ளையர்கள் இல்லை இனி அவர்கள் கவர்னர்கள் ஒரு பொருள் கொள்ளைப் போனாலும் உயிரைக் கொடுத்துக் காக்கும் காவலர்கள்...

ஆம். அது ஒரு மாபெரும் புரட்சி!...

இனி அவர்கள் பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்கமாட்டார்கள் பெண்களை தரம் தாழ்த்தி நடத்த மாட்டார்கள் இனி அவர்கள் மதுவை தொட மாட்டார்கள் விபச்சாரத்தை நெருங்க மாட்டார்கள்...

ஆம். இது தான் புரட்சி!...

ஒரு மனிதனின் வியாபார நோக்கத்தை மாற்றிய புரட்சி...
ஒரு மனிதனின் விருப்புவெறுப்பை மாற்றிய புரட்சி...

தமிழன் டி வி நிகழ்ச்சி அறிவிப்பு

நமதூர் வாசிகளுக்கு ஓர் நற்செய்தி

லப்பைக்குடிகாடு மகளிர் மேல் நிலைப் பள்ளியில்
07-10-2012 அன்று நடைப்பெற்ற
அன்னை ஆயிஷா மகளிர் கல்லூரி
அடிக்கல் நாட்டு விழா நிகழ்சியை
வரும் (2-11-2012) வெள்ளிக்கிழமை இரவு
இந்திய நேரம் 11 மணிக்கு
துபாய் நேரம் 9.30 மணிக்கு
தமிழன் டி வி யில் பாருங்கள்.
இப்படிக்கு
SP.Shamsudeen
LBK Sangam.

துபையில் சிறப்புடன் நடைபெற்ற சமூக நல்லிணக்க நிகழ்ச்சி

மக்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டி, அமைதியை பரப்பும் நோக்கில் வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாயில் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி டெய்ரா பகுதியில் அமைந்துள்ள தமுமுக அலுவலகத்தில் 27.10.2012, வெள்ளிக் கிழமை அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு மண்டலத் தலைவர் அதிரை சாகுல் ஹமீது தலைமை வகித்தார். அமீரகத் துணைத் தலைவர் ஹூசைன் பாஷா நிகழ்ச்சியின் நோக்கம் மற்றும் அவசியத்தை எடுத்துரைத்தார்.
 
சவுதி அரேபியாவிலிருந்து வந்திருந்த அஃப்சலுல் உலமா பொறியாளர் ஜக்கரியா அவர்கள், முஸ்லிமல்லாத மக்கள் இஸ்லாமிய மார்க்கத்தை குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு திருக் குர்ஆன், நபிமார்களின் வாழ்க்கை, வரலாற்று குறிப்புகள், பைபிள், இந்துக்களின் வேத நூல்களிலிருந்து பல்வேறு ஆதாரங்களை அடிப்படையாக வைத்து கேள்விகளுக்கு பதிலளித்தார். அதனையடுத்து, முஸ்லிம்களும் ஒரு சில விஷயங்களைக் குறித்து விளக்கங்கள் கேட்டு தெளிவுபெற்றனர். புதிதாக இஸ்லாமிய மார்க்கத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட பொறியாளர் முஹம்மது அவர்கள் தன்னுடைய மன மாறுதலுக்கான காரணத்தையும், அதனுடைய முக்கியத்துவத்தைக் குறித்தும் பேசினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மண்டல மாநாடு


Monday 29 October 2012

பெருநாள் தொழுகை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

 
நமதூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  சார்பாக ஹஜ்ஜூப்பெருநாள் திடல் தொழுகை நமதூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள சந்தைதிடலில்   27-10-2012 சனிக்கிழமை காலை சரியாக 07:30 மணிக்கு நடைபெற்றது.


இதில் மதுரையைச் சேர்ந்த சகோ.சம்சுதீன் அவர்கள் குத்பா பேருரையாற்றினார்.
இதில் பெருந்திரளான சகோதர சகோதரிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்...

ஆண்கள் மருதானி இடுவது மார்க்கதில் ஆகுமானதா?

ஆண்கள் மருதாணி பூசக் கூடாது என்ற கருத்தில் ஒரு செய்தி அபூதாவூதில் 4280 வது எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைகளிலும் கால்களிலும் மருதாணி பூசிய ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் பெண்களுக்கு ஒப்ப நடந்ததால் அவரை நாடுகடத்துமாறு நபியவர்கள் உத்தரவிட்டதாகவும் இந்தச் செய்தி கூறுகின்றது.

இந்தச் செய்தியில் இடம் பெற்றுள்ள அபூஹாஷிம் மற்றும் அபூ யசார் ஆகிய இரண்டு அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மையும் அறிஞர்களால் உறுதி செய்யப்படவில்லை. இதன் காரணத்தால் இந்தச் செய்தி பலவீனமானதாகும்.

ஆண்கள் மருதாணி பூசலாம் என்றோ பூசக் கூடாது என்றோ ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் நேரடியாக்க் கூறப்படவில்லை. ஆனால் இப்பிரச்சனைக்கு சரியான தீர்வை பின்வரும் பொதுவான செய்தியிலிருந்து அறியலாம்.

39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால். . . . .

உயரே கிளம்ப பலூன்ஆயத்தமாகிறது
பெலிக்ஸ் பாம்கார்ட்னர் என்ற 43 வயது ஆஸ்திரியர் அக்டோபர் 14 ஆம் தேதி சுமார் 39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்து உலக சாதனை படைத்துள்ளார். அவர் கீழே குதித்த காட்சி உலகம் முழுவதிலும் டிவியில் காட்டப்பட்டது.

அவர் வானில் அவ்வளவு உயரத்திலிருந்து கீழே குதித்தது சாதனை தான். ஆனால் அதை விட அந்த அளவு உயரத்துக்கு அவர் போய்ச் சேர்ந்தார் என்பதே பெரிய சாதனை விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட விண்வெளி உடையை அவர் அணிந்திருந்தார் என்பதால் பிழைத்தார்.
 
அப்படியின்றி பலூனுக்கு அடியில் இணைக்கப்பட்ட பெரிய பிரம்புக் கூடையில் உட்கார்ந்தபடி சென்றிருந்தால் 39 கிலோ மீட்டர் உயரத்தை எட்டுவதற்கு முன்னரே அவர் மேல் லோகத்துக்கு போய்ச் சேர்ந்திருப்பார். அது ஏன்?

Friday 26 October 2012

பெருநாள் தொழுகை - துபை


அமீரகத்தின் துபாய் நகரில் உள்ள தேரா ஈத்கா திடலில் மக்கள்  தியாக திருநாளான ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகையை தொழுதனர்.

காலை 6:00 மணி முதலே பொதுமக்கள் ஈத்கா திடலை நோக்கி அலை அலையாக திரள  தொடங்கினர்.  சரியாக காலை 6:45 மணியளவில் தொழுகை ஆரம்பித்தது. தொழுகை முடிந்ததும் குத்பா பேருரை நடைபெற்றது. இறுதியாக மக்கள் ஒருவரை ஒருவர் சகோதரப் பாசத்துடன் கட்டித் தழுவி ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

பெண்களும் தொழுகையில் கலந்து கொண்டு தங்களுக்குள் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டனர்.

Thursday 25 October 2012

பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா?

16 வயது… பெண்களுக்கு ஒருவிதமான மனரீதியான ரசாயன மாற்றத்தை கொடுக்க கூடிய ரெண்டும் கெட்டான் வயது, நல்லதும் தெரியாது, கெட்டதும் புரியாது என்பார்கள்.. வெழுத்ததெல்லாம் பால்
மின்னுவதெல்லாம் பொன் என்று நினைத்து விடுகிறார்கள்.

இந்த வயதுடைய பள்ளிக்கு செல்லும் மாணவிகள் சிலர் விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகளாய் காதல் வலையில் விழுந்த
ு வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். ஓரக்கண்ணால் பார்த்து… தயங்கி தயங்கி பேசி சத்தமில்லாமல் கடிதம் கொடுத்து… காதல் வளர்த்த காலம் போயே போச்சு.

நறுக்கு சுறுக்குன்னு ஒருபார்வை.. உங்க செல்போன் நம்பர் என்ன? என்று கேட்டு ஒரு சிரிப்பு.. அவ்வளவு தான் மறுநாளில் இருந்து அந்த செல்போன் நம்பருக்கு மணி கணக்கில் பேச்சு… 3 மாதம் கழித்து அந்த பையனுடன் ஓட்டம். இது தான் இன்றைய பள்ளி மாணவிகளின் தறிகெட்ட நிலை. இதில் பலர் முதல் திருமணம் செய்த வாலிபர்கள் என்பது வெளியே தெரியாத கொடுமை.

Wednesday 24 October 2012

தியாகத் திருநாள்....!!!!

இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் பேரால் இந்த உம்மத்துக்கு அறிமுகப்படுத்தியது இரண்டு ஈத்கள் (பெருநாள்கள்) மட்டுமே. “ஒன்று ஈகைத் திருநாள். மற்றொன்று தியாகத் திருநாள்.

இரண்டு பெருநாட்களும் மாபெரும் இலட்சிய அடிப்படையில் அமைந்துள்ளன.

ரமழான் முழுதும் நோன்பு நோற்று, தனது அத்தியாவசியத் தேவைகளை இறை ஆணைக்குக் கட்டுப்பட்டு, தடுத்துக் கொள்வதன் மூலம்.

ஏழைகளின், இல்லாதவர்களின் நிலை எப்படி இருக்கும்? அவர்களின் கஷ்டங்கள் எப்படிப்பட்டவை? என்பவற்றை அனுபவத்தால் உணர வைத்து. இல்லாதோருக்கு ஈந்து மகிழ்ந்து கொண்டாட்டம் ஒரு நன்நாளாக ஈகைத் திருநாள் அமைந்துள்ளது.

மரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்....!!!!

மரணிக்கும் போதும், மண்ணறையிலும் நடைபெறவுள்ளதை தெளிவாக அறிந்துக் கொள்வோம் வாருங்கள்!...

அல்லாஹ் கூறுகிறான்: – ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (அல்-குர்ஆன் 21:35)

மரணம் என்பது நிச்சயமானது. அதிலிருந்து எந்த உயிரினத்தாலும்
மீளமுடியாது. நாம் வாழும் காலம் குறுகியது என்று உணர்ந்த பிறகும் மரணிக்கும் போதும் அதன் பிறகு நடப்பவை பற்றியும் கவனக்குறைவாக, அல்லது மரணத்தையே மறந்தவர்களாக நாம் இருக்கின்றோம்.

இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் மரணவேளை என்பது தவிர்க்க முடியாததாகும். எனவே இந்த உலகவாழ்வின் இறுதிக் கட்டமான அந்த மரணத்தின் நேரம் மற்றும் மண்ணறைகளில் நடைபெறக் கூடிய நிகழ்ச்சிகளைப் பற்றியும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

அல்லாஹ் எங்கும் இருக்கின்றானா?... அல்லாஹ் எங்கே இருக்கின்றான்?...

முஸ்லிம்களின் அடிப்படையான நம்பிக்கையில் ஒன்று, அல்லாஹ்வையும், அவனுடையபண்பு களையும் தெரிந்து கொள்வதாகும்!. இதுவே ஈமானின் கடமைகளில் முதல் கடமையாகும்!.

இது பற்றி நமது இஸ்லாமிய சகோதர, சகோதரி களிடம் பரவலாக இருக்கும் ஒரு தவறான நம்பிக்கையை மட்டும் தெளிவு படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்!. இன்ஷா அல்லாஹ்!...

அதாவது, அல்லாஹ் எங்கும் இருக்கின்றான். தூணிலும் இருக்கின்றான்! துரும்பிலும் இருக்கின்றான்! என்ற நம்பிக்கை தவறானதாகும். இப்படி ஒரு முஸ்லிம் நம்புவது, குர்ஆனுக்கும் நபிகளாரின் வழிமுறைக்கும் மாற்றமான கொள்கையாகும்.

அல்லாஹ் அர்ஷின் மீது இருக்கின்றான் என்பதே சரியான கொள்கையாகும். பின்வரும் குர்ஆன் மற்றும் ஹதீதுகளும் அல்லாஹ் அர்ஷின் மீது தான் இருக்கின்றான்! என்பதை தெளிவுபடுத்துகின்றது.

அல்லாஹுவின் கூற்றுக்கள்:-

1. அர்ரஹ்மான் அர்ஷின் மீது இருக்கின்றான். (அல்குர்ஆன் 20:5)
அதாவது, அல்லாஹ் உயர்வான இடத்தில் இருக்கின்றான் என்பதாக பல தாபிஈன்கள் இந்த ஆயத்திற்கு விளக்கமளிக்கின்றார்கள்.
இந்தச் செய்தி, புகாரியில் பதியப்பட்டிருக்கின்றது.

பிறந்த நாள் கொண்டாட்டம் அறிவுக்கு ஏற்றதா?

பிறந்த நாள் கொண்டாட்டம் அறிவுக்கு ஏற்றதா?
என்பதை அறிவுப்பூர்வமாக அறிந்துக் கொள்வோம்!...

மார்க்கத்தில் பிறந்த நாள் கொண்டாடுவது தடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு முதல் காரணம் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் என்பது யூத, கிறிஸ்தவ வழிமுறை!...

அவர்கள் மூலம் வழி வழியாக வந்தது தான் இந்த கொண்டாட்டம்! அதன் வழிதோன்றல் என்ன என்பதை உணராத இன்றைய முஸ்லிம்கள், அதை செய்தால் என்ன தவறு என்று கேட்டுக்கொண்டு கொண்டாடி வருகிறார்கள்.

பிறந்த நாள் என்பது நபியின் காலத்திலும் இருந்த ஒரு நிகழ்வு தான். இது கொண்டாடப்பட வேண்டிய ஒரு காரியமாக இருந்திருந்தால் அதை முதலில் நபி (ஸல்) அவர்கள் செய்திருப்பார்கள்! அல்லது செய்ய சொல்லியிருப்பார்கள்!! அல்லது சஹாபாக்கள் செய்ததை அங்கீகரித் திருப்பார்கள்!!!...

இதில் எதையும் நபி (ஸல்) அவர்கள் செய்யாததிலிருந்து அது முழுக்க முழுக்க யூத, நசாராக்களின் கலாசாரம் என்பதை அறிய முடிகிறது. ஈசா நபி காலம் தொட்டே இந்த பிறந்த நாள் கலாசாரம் யூத கிறிஸ்த வர்களிடையே இருந்து வந்துள்ளது.

வலிமார்கள் நமக்கு வக்கீல்களா?

அவ்லியாக்கள் பெயரால் நடைபெறும் அநாச்சாரங்கள் மார்க்கத்திற்கு அப்பாற்பட்டவை என்பதை உணர்ந்து ஒதுக்கித் தள்ளிய உத்தமர்களிலும் கூடச் சிலர், தர்காக்களுக்குச் செல்வதையும், வலிமார்கள் மூலம் அல்லாஹ்விடம் பிரார்த்திப்ப...
தையும், நியாயம் என்று நினைக்கின்றனர்.

தமது தேவைகளை அவ்லியாக்கள் மூலம் கேட்பதற்குச் சில உதாரணங்களை ஆதாரங்களாக அள்ளி வீசுவார்கள்.முதலமைச்சரை நாம் நேரடியாகச் சந்திக்க முடியுமா? நமது தொகுதி சட்டமன்ற உறுப்பினரை முதலில் சந்திக்க வேண்டும். அவர் நம்மை அழைத்துச் சென்று முதலமைச்சரிடம் அறிமுகப் படுத்தி வைப்பார். அதன் பிறகுதான் முதலமைச்சரிடம் நமது தேவையைக் கேட்க முடியும். இதே உதாரணம், முதலமைச்சருக்குப் பதிலாக மன்னர், பிரதமர், கலெக்டர், என்று இடத்துக்குத் தக்கபடி மாறுவது உண்டு.

மார்க்கத்தில் ஹலால் - ஹராம்....!!!!

மார்க்கத்தில் ஹலால் - ஹராம் என்பதை எவ்வாறு பிறித்தறிவது?
என்பதை அறிவுப்பூர்வமாக அறிந்துக்கொள்வோம் வாருங்கள்!...

நமது மார்க்கத்தில் ஒன்றை ஹலால் என்றோ! ஹராம் என்றோ! சொல்வதானால் அதை இரண்டு வகையாக பிரிக்கலாம்!...

1. மறுமை சம்மந்தப்பட்ட விஷயங்கள்!
2. உலகம் சம்மந்தப்பட்ட விஷயங்கள்!

மறுமை சம்மந்தப்பட்ட விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அதை நாம் செய்ய நினைத்தால் மார்க்கத்தில் ஆதாரம் இருக்கிறதா?,

அதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? என்று மட்டும் தான் பார்க்க வேண்டும், மார்க்கத்தில் தடை இருக்கிறதா என்று பார்க்க கூடாது.

இது இஸ்லாமிய பாடத்தில் அடிப்படையாக கற்றுக்கொள்ள வேண்டிய செய்தி!...




உதாரணமாக, ரமளானில் நோன்பு வைக்க வேண்டும் என்று ஒருவர் சொன்னால் அவரிடம், இதற்கு குர்ஆன் ஹதீஸில் எங்கே அனுமதி உள்ளது என்று கேட்க வேண்டும்.

அனுமதி இருந்தால் செய்ய வேண்டும், அனுமதி இல்லை என்றால் செய்ய கூடாது.

Tuesday 23 October 2012

பிரார்த்தனையும், அதன் ஒழுங்குமுறைகளும்....!!!!

 அவனுக்கு எதையும் இணையாக்காமல் அவனிடமே கேளுங்கள்!...

அல்லாஹ் மனிதனைப் படைத்து, அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் கொடுத்துள்ளான்.

அல்லாஹ் மனிதனிடம் கூறுவது ஒன்றே ஒன்றுதான். ‘நீ எனக்கு மட்டுமே அடிபணிய வேண்டும் எனக்கு எதையும் இணையாக்காதே! ’என்பது தான் அது!

இவ்வாறு இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களில் ஒன்று தான் அல்லாஹ்வை மட்டும் அழைத்து அவனிடம் பிரார்த்தனை செய்வது!

அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.‘பிரார்த்தனை ஒருவணக்கமாகும் ’பிறகு, ‘என்னை அழையுங்கள்! உங்களுக்கு பதிலளிக்கிறேன். எனக்கு அடிபணிவதை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். (40:60) என்ற இறை வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.

இறப்புச்செய்திகள் - 23-10-12

மேற்கே காயிதே மில்லத் நகரைச்  சேர்ந்த (மேற்கு கப்ருஸ்த்தானுக்கு எதிர்புறம்) துருகம் நிஜாம் அவர்களின் மனைவியும், சதக்கத்துல்லாஹ் மற்றும் சபியுல்லாஹ்  அவர்களின் தாயாருமாகிய மஹ்மூதா அவர்கள்  நேற்று (22-10-12) திங்கள் கிழமை இரவு வபாத்தாகி விட்டார்கள்.
 
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
 
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (23-10-12) செவ்வாய் கிழமை காலை மேற்கு கப்ருஸ்தானில் நடைபெறுகிறது.
 
அன்னாரின் மறுமைவாழ்வின் நற்பேருக்காக எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துஆ செய்ய கேட்டுக்கொள்கிறோம்.

வேறு நாளில் கலந்தாய்வு , SDPI கோரிக்கைக்கு பல்கலைகழக நிர்வாகம் பதில்

பக்ரித் பெருநாள் தினத்தில் பி.எட் கலந்தாய்வு நடத்த திட்டமிட்டு இருந்ததை தள்ளிவைக்க வலியுறுத்தி SDPI மாநில தலைவர் K K S M தெஹ்லான் பாகவி தமிழக முதல்வர் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோருக்கு பேக்ஸ் மூலம் கோரிக்கை விடுத்தார்.
 
இது சம்பந்தமாக SDPI தலைமையகத்தை தொடர்பு கொண்டு பேசிய மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வி துரையின் துணை இயக்குனர் ரவிச்சந்திரன் ,நாங்கள் கலந்தாய்வு தேதியை முடிவு செய்யும் போது காலண்டரை பார்த்து தான் முடிவு செய்தோம் ,காலண்டரில் 26 ஆம் தேதி என்று தான் போடப்பட்டு இருந்தது.

Monday 22 October 2012

மழைகாலத்தில் ‘மின்சாரம்’ தாக்காமல் இருக்க என்ன ...

பருவமழை காலங்களில் மின்சாரம் தாக்காமல் இருக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை மின்சார வாரியம் வெளியிட்டிருக்கிறது.

மின்சார வாரியத்தின் அட்வைஸ்ட் டிப்ஸ் சில...
1- மின் விபத்துகளை தவிர்க்க மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்ற மின்ஒப்பந்தகாரர்கள் மூலம் செய்வதுடன், ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற மின்சாதனங்கள் பயன்படுத்த வேண்டும்.
 
2- மின்சார பிளக்குகளைப் பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்து விட வேண்டும்.
 
3- குளிர்சாதனப்பெட்டி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகளை பயன்படுத்துவது, ஈ.எல்.சி.பி. என்ற மின்கசிவு கருவியை மெயின் ஸ்விட்ச் போர்டில் பொருத்துவது, உடைந்த மின்சாதனங்களை உடனடியாக மாற்ற வேண்டும்.

வெளிவந்துவிட்டது யூடுபுக்கு மாற்றாக!

வெளிவந்து விட்டது ஆன்லைன்பிஜேயின் வீடியோ இணையதளம். அல்ஹம்துலில்லாஹ்
இதில் நேயர்களுக்கு தேவையான ஏரளாமான வசதிகளை இடம் பெறச் செய்துள்ளோம்.

குறிப்பாக,இதில் இடம் பெறும் வீடியோக்களை கணிணி , ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோனிலும் பார்த்துக் கொள்ளலாம்.


ஒரு மணி நேர வீடியோவில் நேயர்கள் தங்களுக்கு தேவைான பகுதியை எளிதில் பார்க்கலாம் அந்த பகுதி டவுன்லோடு ஆகும்வரை காத்திருக்க தேவையில்லை.இன்னும் பல்வேறு வசதிகளுடன் Youtube ஒழித்து கட்ட வெளிவந்து விட்டது நமது வீடியோ இணையதளம்!

*
நேயர்களே வீடியோக்களை அப்லோடு செய்து கொள்ளலாம்.

Take a Look http://video.onlinepj.com


பார்த்து விட்டு, வீடியோ இணையதளம் குறித்த தங்களின் கருத்துக்களை webmaster@onlinepj.com க்கு அனுப்பலாம்
ஆன்லைன்பிஜே
-
வெப்மாஸ்டர்

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நோட்டீஸ்




































நன்றி : TNTJ YANBU
 

இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட ரமேஷ்

பெரம்பலூர் மாவட்டம் புதுஆத்தூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையில்   கடந்த 15/10/2012 திங்கள்கிழமை அன்று பில்லாகுளம் கிராமத்தினைச் சேர்ந்த சகோ.ரமேஷ் என்பவர் தூய மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.

ரமேஷ் தனது பெயரை இப்ராஹிம் என மாற்றிக்கொண்டார்.
 
அவருக்கு புதுஆத்தூர் கிளை சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாத்தை பற்றிய DVDக்கள், புத்தகங்கள் வழங்கப்பட்டது.
 
அல்ஹம்துலில்லாஹ்...

இப்ராஹீம் நபி வாழ்வு தரும் படிப்பினை....!!!!

திருக்குர்ஆனில் கூறப்பட்ட நபிமார்களில் இப்ராஹீம் (அலை) அவர்கள் மிகவும் சிறப்பித்துக் கூறப்பட்டவர்கள்.
இவர்களது குடும்பத்தினரின் வாழ்வின் பின்னணியில் நாம் பின்பற்றும் முக்கிய கடமைகளும் உள்ளன.
ஹஜ் கடமையில் ஸஃபா, மர்வாவுக்கு மத்தியில் ஓடுதல், குர்பானி கொடுத்தல் போன்ற காரியங்களில், இவர்களது குடும்பம் பின்னணியில் இருப்பதை நாம் மறந்து விட முடியாது.

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மாபெரும் தியாகத்தை நினைவு கூரும் வண்ணமே இவ்வாறு அல்லாஹ் அமைத்துள்ளான்.
மேலும் பகுத்தறிவுக் கொள்கையை இவ்வுலகிற்குப் பறை சாற்றியவர்களில் நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு முதலிடம் தரலாம்.

எந்த விதமான சக்தியும் இல்லாத கல், மண்ணை விட சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எவ்வளவே மேல் என்று அறிவுப்பூர்வமாக விளக்கி, கடவுள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தினார்கள்.

கஃபா (முதல் இறையில்லம்) வரலாறு....!!!!

{அபய பூமி} கஃபா {முதல் இறையில்லம்} வரலாறு....!!!!

அகில உலகங்களையும் படைத்த அல்லாஹ், தான் ஒருவன் மட்டும் தான் கடவுள் என்பதற்கு, அவற்றை அத்தாட்சிகளாகவும் ஆக்கினான்.

இவை இன்றளவும் அல்லாஹ் மட்டும் தான் ஒரே கடவுள் என்பதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன. அப்படிப் பட்ட அத்தாட்சிகளில் உள்ளவை தான் அவனுடைய புனிதமிக்க ஆலயமாகிய கஅபாவும் அது அமைந்துள்ள மக்கமா நகரமும் ஆகும்.

உலக முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டுமிடமாகவும், உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டைப் பறைசாற்றக் கூடியதாகவும் இவ்வத்தாட்சிகள் அமைந்துள்ளன.

'கஅபா' ஆலயத்திற்கும், மக்கமா நகரத்திற்கும் மற்ற ஆலயங்களை விடவும், நகரங்களை விடவும் தனித்த சிறப்புகளும், சட்டங்களும் உள்ளன. அப்படிப்பட்ட சிறப்புகளில் சிலவற்றைக் காண்போம்.

Sunday 21 October 2012

ஹாஜி-யார்?

இன்று திறப்பு விழா காணும் பிரியாணி ஹோட்டல் சிறக்க வாழ்த்துகின்றோம் என்று விளம்பர போஸ்டர்கள் வீதிகளில் ஒட்டப்படுவதைப் பார்த்திருக்கின்றோம். ஆனால் அந்தப் போஸ்டர்களை எல்லாம் மிஞ்சும் விதமாக, காசிம் மரைக்காயரின் ஹஜ் பயணம் சிறக்க வாழ்த்துகின்றோம் என்று வழியனுப்பு விழா போஸ்டர்களும், ஹஜ்ஜுக்குச் சென்று திரும்பி வரும் போது, ஹாஜி பக்கீர் லெப்பையை வரவேற்கிறோம் என்று வரவேற்பு போஸ்டர்களும் கண்ணைக் கவரும் விதத்தில் அச்சடிக்கப்பட்டு ஒட்டப்படுகின்றன.

ஹஜ் செய்வது ஒரு புனித காரியம். இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். தொழுகை, நோன்பு போன்ற கடமைகளைப் போல் ஹஜ் என்பது எல்லோருக்கும் கடமையாகி விடாது. யாருக்கு ஹஜ்ஜுக்குச் சென்று வருவதற்கு வசதியிருக்கின்றதோ அவர்களுக்கு மட்டுமே ஹஜ் செய்வது கடமையாகும்.

அமீர் கானின் ஹஜ் பயணம்..

திரைப்பட நடிகர் அமீர்கான் தனது தாயார் மற்றும் குடும்பத்துடன் இந்த வருடம் ஹஜ்ஜுக்கு சென்றிருக்கிறார்.

இவர் மும்பையில் உள்ள அல் ஹாலித் டூர்ஸ் அன்ட் ட்ராவல்ஸ் எனும் நிறுவனத்தின் மூலம் தன்னுடைய ஹஜ் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இவர் தன்னுடைய தாயாருக்கு ஹஜ்ஜுக்கு அழைத்துச்செல்வதாக முன்பு வாக்குறுதி அளித்திருந்தாராம் அதை நிறைவேற்றும் முகமாக இந்த வருடம் சென்றிருக்கிறார்,நல்ல செய்தி..ஆனால் இவர் ஹஜ்ஜிலிருந்து திரும்ப வந்ததும் இவர் சார்ந்திருக்கும் திரைப்பட தொழில்தான் இந்த மக்களின் அனைத்து கலாச்சார சீரழிவுகளுக்கும் அடிப்படை காரணம் என்பதை உணர்ந்து இந்த தொழிலில் இருந்து விலகி வேறு நல்ல தொழிலில் ஏடுபட்டால் இவர் ஹஜ் நன்மை பயக்கத்தக்கதாக மாறிவிடும்.

எதற்க்காக இந்த கூத்து...?

சமுதாயத்தின் கலங்கரை விளக்கமாம் தமுமுக மற்றும் மம கட்சியின் இரண்டே இரண்டு கண்னே கண்னு வேட்பாளர்களில் ஒருவரான அஸ்லம் பாஷா தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டிய அங்கன்வாடியை பூஜை செய்து திறந்து வைப்பதை தான் நீங்கள் பார்க்கின்றீர்கள்.
 
அல்லாஹ்விற்க்கு இணைவைத்து தான் இதை செய்ய வேண்டுமா ?? இஸ்லாத்தின் ஆணிவேரான தவ்ஹீதை காப்பாற்றி இந்த நிகழ்ச்சியை செய்ய இயலாதா என்ன ?? மறுமையை மறந்து இம்மை வாழ்விற்க்காக இஸ்லாத்தை இழக்கும் இவர்களை தானே தமுமுக தொண்டர்கள் சமுதாயத்தின் கலங்கரை விளக்கம் என்று நம்புகின்றார்கள்.

Saturday 20 October 2012

பக்ரீத் பெருநாளில் பி.எட். கலந்தாய்வு ஒத்தி வைக்குமாறு மமக கோரிக்கை

முஸ்லிம்களின் பக்ரீத் பெருநாளில் நடைபெறவிருக்கும் பி.எட். கலந்தாய்வு மற்றும் கருத்தரங்குகளை ஒத்தி வைக்குமாறு மனிதநேய மக்கள் கட்சியின் மூத்தத் தலைவரும் இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா தமிழக உயர்கல்வித்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் மேலும் அக்கடித்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
 
வருகின்ற 27.10.2012 அன்று முஸ்லிம்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
 
அன்றைய தினத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் பி.எட். பயிற்சியில் பயின்றுவரும் மாணவ/மாணவியர்களுக்கான கவுன்சிலிங் மற்றும் கருத்தரங்கம் சென்னை, திருச்சி, கோவை, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளதால் அதில் காலை 9:30 மணிக்கு பங்கேற்க வேண்டும் என்று மதுரை காமராஜர் பல்கலைக் கழக தொலைதூர கல்வி இயக்குநர் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

உலகின் முதல் மனிதர்

அல்லாஹ் மறைவானவன், அவன் மறைந்திருப்பவன். தான் இருப்பதை தெரிவிப்பதற்காக அல்லாஹ் அழகான உலகத்தை படைத்தான். உலகம் மட்டுமல்ல பல கோள்கள், சந்திரன், நட்சத்திரங்கள் போன்ற அனைத்தையும் படைத்து, அவை அத்தனையையும் ஒன்றோடு ஒன்று மோதி விடாதவாறு சுழலவிட்டுள்ளான். அப்படிப்பட்ட அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
 
பின்னர் அல்லாஹ் மனிதனைப் படைக்க முடிவு செய்தான். பானைகள் செய்ய பயன்படுத்தப்படும் களி மண்ணால் அல்லாஹ் மனிதனை செய்தான். அவன் தன்னுடைய ஆவியை அதனுள் ஊதினான். இப்படித்தான் அல்லாஹ் முதல் மனிதருக்கு உயிரைக் கொடுத்தான். அவர் தான் நம் எல்லோருக்கும் தந்தை, மூலத்தந்தை. ‘ஆதம்’ என்று அல்லாஹ் அவருக்கு பெயர் சூட்டினான்.
 
இன்று மக்கள் வேறுபட்ட நிறங்களிலும், வேறுபட்ட உருவ அமைப்பிலும், வேறுபட்ட மொழியை பேசுபவர்களாவும் உலகின் பல்வேறுபட்ட இடங்களில் வாழ்ந்து வருகிறார்கள். அப்படி இருந்தாலும் அவர்கள் எல்லோருக்கும் மூலத்தந்தை ஒருவர் தான். அவர் தான் முதல் மனிதர் ஆதம் (அலை) ஆவார். அல்லாஹ் அவரை முதல் இறைத்தூதராக ஆக்கி, மனிதர்களுக்கு நல்வழி காட்டினான்.

நீண்ட நேரம் கணிணி முன் அமர சரியான முறை..!

நீண்ட நேரம் கணிணி முன்பு உட்கார்ந்து பணி புரிபவர்களுக்கு கண் பார்வை பிரச்சினை, முதுகு வலி, தோள் புஜம் நோவு, முழங்கால் வலி, மணிக்கட்டு வீக்கம், பாதச்சோர்வு, தசைப்பிடிப்பு, தலைவலி, இடுப்புவலி ...( ...போதும்... போதும்... என்கிறீர்களா..? ) ...சரி, இதெல்லாம் வராமல் இருக்க... அல்லது தாமதமாக வர...(!?) அல்லது வந்த வலி குறைய... வேண்டுமானால்,
 
பின்வரும் ஆலோசனைகளை செயல்படுத்தி பாருங்களேன்..
 
1) கணிப்பொறியின் திரையை பார்வை மட்டத்திலும் பார்வைக்கு நேர்க்கோட்டிலும் அமைக்க வேண்டும்.
 
2)      திரைக்கும் உங்கள் கண்களுக்கும் இடையேயான தூரம் 16"-ஆக இருக்க வேண்டும்.


அப்பாவான பெருமை.. அண்டை வீட்டார் பொறாமை : 96 வயதில் குழந்தை பெற்ற தாத்தா

உலகிலேயே வயதான அப்பா தனது 96 வயதில் மீண்டும் தந்தையானார். அரியானாவை சேர்ந்தர் கரம்ஜித். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது 94 வயதில் முதல் குழந்தைக்கு தந்தையானார். இதையடுத்து உலகிலேயே அதிக வயதான தந்தை என்று சாதனை படைத்தார். 2 ஆண்டுக்களுக்கு பிறகு, அதாவது தனது 96 வயதில் கடந்த மாதம் மற்றொரு குழந்தைக்கு தந்தையானார். இதையடுத்து, ‘உலகிலேயே அதிக வயதான அப்பா’ என்ற பட்டத்தை 2வது முறையாக வென்றிருக்கிறார். இவரது மனைவி சகுந்தலாவுக்கு 54 வயதாகிறது.

ஆசிரியர் காலியிடம் நிரப்ப வேண்டும் - தமுமுக வலியுறுத்தல்

அரும் பாவூர் அரசு பள்ளியில் ஆசிரியர் காலியிடம் நிரப்ப வேண்டும் தமுமுக வலியுறுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. கிளை செயலாளர் சமீம் அலி தலைமை வகித்தார். அவை தலைவர் நிஜாமுதீன், மனித நேய மக்கள் கட்சி கிளை செய லாளர் ஷாஜகான், மாணவர் இந்தியா செயலாளர் முகமது அப்பாஸ், கிளைச்செயலாளர் முகைதீன், தொண்டரணி செயலாளர் நவாப்ஷெரீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி செயலாளர் முகமது இலியாஸ் அலி, ஒன்றிய செயலாளர் முகமது உஸ்மான் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில், அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் காலிபணியிடத்தை நிரப்ப வேண்டும். கல்லூரி, பாலிடெக்னிக் படிக்கும் சிறுபான்மை இன மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,

தமிழ்நாடு அரசு வெப்சைட்ஸ்


http://www.tnreginet.net/ தமிழ்நாடு பதிவுத்துறை

http://www.tn.gov.in/ தமிழ்நாடு அரசு

http://www.tnvat.gov.in/ தமிழ்நாடு வணிகவரித் துறை

http://trb.tn.nic.in/ தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணயம்

http://elections.tn.nic.in/ தமிழ்நாடு தேர்தல் ஆணையம்

http://www.tnpsc.gov.in/ தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம்

http://www.tn.nic.in/tnhome/tngov.html அனைத்து தமிழ்நாடு அரசு வெப்சைட் லிங்ஸ் ஒரே இடத்தில்

மனிதன் ஒரு நாளைக்கு 10 நிமிடம் வீணாக்கினா​ல்

1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது.
2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதாரணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்.
3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள் ஒரே அளவாக இருப்பதில்லை காரணம் கருவில் சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக வளர்வதில்லை. இந்த மிகச் சிறிய வத்தியாசம் தான் நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது. நம் இடதுகால் செருப்பை விட வலதுகாலின் செருப்பு வேகமாக தேய்வது கூட இந்த சிறு வித்தியாசத்தால் தான்.

Friday 19 October 2012

கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க..!

======================================================================

மந்திரி : மன்னா ஏன் போருக்கு போகும் போது “ கவசம்
போடுகின்றீர்கள்?

மன்னன் : இல்லனா எனக்கு “ திவசம்” செய்து விடுவார்கள்.

===================================================================

ராஜா : ஜப்பான் ல சுனாமி வந்ததும் நம்ம நடிகர் தனுஷ் யை உதவிக்கு
கூப்பிட்டாங்கலாம்..

விஜய் : ஏன்?

ராஜா : அவர்தான் சுனாமியிலயே swimming போடுபவராசே…!

பெருநாள் தொழுகை

நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாள்களிலும் சிறப்புத் தொழுகை இரண்டு ரக்அத்கள் திடலில் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். இரு பெருநாள் தொழுகையையும் திடலில் தான் தொழ வேண்டும். “மற்ற பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது 1000 மடங்கு நன்மை அதிகம்” (புகாரீ 1190) என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள், பெருநாள் தொழுகையை மஸ்ஜிதுந் நபவீயில் தொழாமல் திடலில் தொழுததன் மூலம் திடலில் தொழுவதன் முக்கியதுவத்தைத் தெளிவு படுத்தியுள்ளார்கள். எனவே இரு பெருநாள் தொழுகைகளையும் திடலில் தான் தொழ வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்கள்: புகாரீ 956, முஸ்லிம் 1612

குர்பானியின் சட்டங்கள்

இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் சதகத்துல் பித்ர் என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் உழ்கிய்யா எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது.
ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது தான் குர்பானி எனப்படுகிறது. இந்தக் குர்பானியின் சட்டங்களைப் பற்றி பார்ப்போம்.
 
குர்பானி கொடுக்கும் நாட்கள்
 
குர்பானி கொடுக்க கடமைப்பட்டவர்கள் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகுதான் கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்னால் கொடுத்தால் அது குர்பானியாக ஆகாது என்று நபி (ஸல்) அர்கள் கால நிர்ணயம் செய்துள்ளார்கள்.

ஹஜ் சட்டங்கள்

ஹஜ் செய்வர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள்! ஹஜ் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டி ஹஜ் சட்டங்கள்
ஹஜ் என்பது இஸ்லாமியக் கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். இந்தக் கடமையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு நிறைவேற்றுகிறார்கள்.
தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற வணக்கங்களின் செயல்முறையை இந்தப் பத்தாண்டுகளில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து தெரிந்து கொண்ட நபித்தோழர்களுக்கு, ஹஜ் என்ற வணக்கத்தின் செயல்முறை மட்டும் நிலுவையில் இருந்தது. அதை நிறைவேற்றும் முகமாக நபி (ஸல்) அவர்கள் பயணத்தைத் துவக்கியதும் நபித்தோழர்கள் அன்னாரின் ஹஜ் வணக்கத்தை மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கலானார்கள்.

அரியலூரில் இஸ்லாத்தை ஏற்ற ஜோசப்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  அரியலூர் கிளையில் கடந்த 23-09-2012 அன்று ஜோசப் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை யூசுப் என மாற்றிக் கொண்டார்.
 
இவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.....

பெரம்பலூரில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர்

தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  பெரம்பலூர் கிளை சார்பாக கடந்த 03/10/2012 அன்று மருவத்தூரைச் சேர்ந்த ஆசிரியரான சகோ.சத்தியமூர்த்தி தூய மார்க்கமான இஸ்லாத்தை  தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது  பெயரை  முஹம்மது  ரில்வான்  என  மாற்றிக் கொண்டார்.
 
இவருக்கு இஸ்லாம் சம்பந்தமான புத்தகங்கள்  மற்றும் சீடிக்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்....

பற்பசையில் விஷம்

பள்ளிக்குச் செல்லும் பருவத்தினரில் தொண்ணூறு சதவிகிதத்தினர் டென்டல் கேரிஸ் எனப்படும் சொத்தைப் பற்களாலும் ஈறு நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். அதை விட அதிகமாக வாய் நாற்றம், வயிற்றுப் பூச்சித் தொல்லை, அடிக்கடி மலம் கழிப்பது போன்ற சுகாதாரப் பிரச்னைகளால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பல பள்ளிகளில் நடத்திய ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. ஐந்து, ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் பல்துலக்கும்போது பற்பசையை விழுங்கி விடுவதுண்டு. இதுதான் உடல்நலத்திலும் பற்களின் நலத்திலும் கேடு விளைவிக்கிறது. ஏனென்றால் பற்பசைகளில் ப்ளோரைடு என்ற ரசாயனப்பொருள் கலந்திருப்பதாக ‘நேஷனல் ட்ரிங்கிங் வாட்டர் மிஷன்’ என்ற தேசிய குடிநீர் பராமரிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

தவறான உணவு பழக்கத்தாலும் மூட்டு வலி வரும் வாய்ப்பு

மூட்டுகளில் தேய்மானம் அடைவதால் ஏற்படுவது மூட்டு வாதம். பொதுவாக மூட்டு வாதம் எனப்பட்டாலும், இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இந்த நோய் பெரும்பாலும் வயதானவர்களையே தாக்குகிறது. தற்கால உணவு பழக்க வழக்கங்கள் உடலில் பலவீனத்தை ஏற்படுத்துகின்றன. அதிலும் பாஸ்ட் புட் கலாசாரம் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. பெயரில்தான் பாஸ்ட் இருக்கிறதே தவிர, இதை உண்பதால் உடலில் சுறுசுறுப்பு குறைந்து விடுகிறது என்பது என்னவோ நிஜம்தான். அதுபோல் தற்போதைய வேலை முறைகளும், உடல் உழைப்புக்கு அவசியமே இல்லாத அளவுக்கு உள்ளது.

மின்சார சிக்கனம்-எளிய வழிகள்

மின்சாரத்தைத் தொட்டால் ஷாக் அடிக்கும் என்பது தெரியும். சில வேளை மின்சார வாரியம் வழங்கும் பில்கள் கூட ஷாக் அடிக்கும். மின்சாரத்தை நாம் அதிகமாக உபயோகிக்கும் போது ஒரு மீட்டரில் அது செலவுக்கணக்கில் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை எப்போதும் நினைவில் வைத்திருந்தால் இது போன்ற ஷாக் தவிர்க்கலாம். மின்சாரத்தை சிக்கனப்படுத்த சில எளிய வழிகளை கடைபிடித்தாலே போதும்.

PJ பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்

எத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற துவா செய்யுங்கள்' என்று..! ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெயில்- இது ஏனோ, எனது குடும்பத்து உறுப்பினர் நோய்வாய்ப்பட்டது போன்ற ஒரு சோகத்தை என்னுள் ஏற்படுத்துகிறது. காரணம், நான் மட்டுமல்ல... 'குர்ஆன் ஹதீஸ் மட்டுமே தனது வாழ்வியல் மார்க்கம், என்று யாரெல்லாம் எனது தலைமுறையில் வாழ தலைப்பட்டனரோ, அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்வினுள்ளும் மார்க்க ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் மவுலவி சகோ.பீஜே' என்று கூறினால் அது மிகை அல்லதான்..!

Thursday 18 October 2012

TNTJ லப்பைக்குடிக்காடு துபை அமர்வு

ஏக நாயன் அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லெப்பைக்குடிக்காடு ஊர் கூட்டமைப்பின் வழமையான மாதாந்திர அமர்வின் அக்டோபர் மாத அமர்வு 05/10/2012 வெள்ளிக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் 07:00 மணி முதல் இஷா வரை துபை மண்டல தலைமை மர்கஸில் நடைப்பெற்றது.

Thursday 11 October 2012

ஹஜ் பெருநாள் கேக்

லப்பைகுடிகாடு மக்களுக்கு வி.களத்தூர் புஷ்ரா நல அறக்கட்டளையின் மகிழ்ச்சியான அறிவிப்பு!

 
கடந்த பல வருடங்களாக வி.களத்தூர், மில்லத் நகர் மக்களுக்கு ஈத் பெருநாள் கேக்குகளை சிறப்பாக வழங்கி வருகிறது.இந்த வருடமும் தனது சேவையை மேம்படுத்தும் விதமாக வரும் பக்ரீத் பெருநாள் அன்று லப்பைகுடிகாட்டிலும் பக்ரீத் கேக்கை நீங்கள் கொடுக்கும் முகவரிக்கு குறித்த நேரத்தி்ல் டெலிவரி செய்யப்பபடும்.உங்களின் ஆர்டர்களை கீழ்கானும் துபாயில் உள்ள நமது பொருப்பாளர்களிடம் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஒரு கேக்கின் விலை 13 திர்ஹம் மட்டுமே!

ஆர்டர் பெறும் கடைசி தேதி : 23.10.2012

கேக் ஆர்டர்களுக்கு கிழ்க்கண்ட சகோர்களை தொடர்பு கொள்ளவும்:

Sunday 7 October 2012

நமதூரில் கூட்டு குர்பானி திட்டம்

இன்ஷா அல்லாஹ்
வரக்கூடிய தியாக திருநாளான ஹஜ் பெருநாளை முன்னிட்டு நமதூரில் ஜமாத்துக்களும் மற்றும் சமுதாய அமைப்புக்களும் கூட்டு குர்பானி திட்டம் விலையை நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.
 
அதன் விபரம்

ஒரு மாடு 7 பங்கு

அனைவரும் 1600 ரூபாய் என நிர்ணயம் செய்துள்ளபோது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் ஒரு பங்கிற்க்கு 1500 ரூபாய் என நிர்ணயம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு பங்கின் விலை ஜமாஅத் வாரியாக

மேற்கு ஜமாஅத் - 1600

கிழக்கு   ஜமாஅத் - 1600
 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - 1500

தாருஸ்ஸலாம் ஜமாஅத் - 1600

த.மு.மு.க - 1600

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா - 1600

Saturday 6 October 2012

மகளிர் கல்லூரி அடிக்கல் நாட்டும் விழா - CMN சலீம் பங்கேற்பு

இன்ஷா அல்லாஹ்
வரும் ஞயிற்று கிழமை மதியம் 3:30 மணியளவில் நமதூர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் அன்னை ஆயிஷா மகளிர் கல்லூரி அடிக்கல் நாட்டும் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அது சமயம் சமூக நீதி அறக்கட்டளை சார்பாக CMN சலீம் (நிறுவனர், சமூக நீதி அறக்கட்டளை, சென்னை) அவர்கள் வருகை தந்து சிறப்புறை ஆற்ற உள்ளார்கள்.
 
இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 
இப்படிக்கு

LBK Sangam நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்

இறப்புச்செய்திகள் - 05-10-12

எடிசலாட்(Etisalat) கட்டாரி சம்சுதீன்  அவர்களின் தகப்பனார்,  உரக்கடை யஹ்யா அவர்கள் 05-10-12 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அவர்களது மஃபிரத்துக்காகவும், மறு உலகத்தில் நற்பதவி கிடைப்பதற்க்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Wednesday 3 October 2012

வேலை வாய்ப்பற்றோர் உதவி பெரம்பலூர் கலெக்டர் அழைப்பு

பள்ளியில், எஸ்.எஸ்.எல்.ஸி., பயின்று தேர்ச்சியடையாதவர்கள் முதல் பட்டதாரிகள் வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தில், பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
இதற்கு, கல்வி தகுதியை பதிவு செய்து, ஐந்தாண்டு முடிவடைந்தவராக இருக்க வேண்டும், 30.09.2007 அன்றோ அதற்கு முன்னரோ, பதிவு செய்தவராக இருக்கலாம். மனுதாரர் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை, தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும்,

குளிர்சாதனைப்பெட்டி

ஒருமுறை வாங்கி, பல முறை பயன்படுத்தப்படும் பொருள் ஃப்ரிட்ஜ் என்ற ரெஃப்ரிஜிரேட்டர். எந்தெந்த பிராண்டுகளில் என்னென்ன வகை ஃப்ரிட்ஜுகள் கிடைக்கின்றன? விலை என்ன? எப்படிப் பராமரிப்பது?...
 
இதோ உங்களுக்கான வழிகாட்டி!

வெர்ல்பூல், எல்.ஜி., சாம்ஸங், காத்ரேஜ், கெல்வினேட்டர், வீடியோகான், எலெக்ட்ரோலக்ஸ், ஹேயர்... இப்படி ஏகப்பட்ட பிராண்ட்... 180 லிட்டரிலிருந்து 400 லிட்டர் வரை கொள்ளளவு கொண்ட விதம்விதமான ஃப்ரிட்ஜுகள் மார்க்கெட்டில் உள்ளன. 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு 180 லிட்டர் கொள்ளளவைத் தாங்கும் ஃப்ரிட்ஜ் போதுமானது.
பிராண்டுகளும் விலைகளும் தோராயமாக...

Followers