பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (21ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து லப்பைக்குடிக்காடு உதவி செயற்பொறியாளர் சுகுமாரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மங்களமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 21ம் தேதி (நாளை) நடைபெற உள்ளது. எனவே, இங்கிருந்து மின்வினியோகம் பெறும் வாலிகண்டபுரம், தேவையூர், மங்களமேடு, வி.களத்தூர், டி.கீரனூர், பெருமத்தூர், குன்னம், வரகூர், மூங்கில்பாடி, பரவாய், நன்னை, வேப்பூர், எழுமூர், அயன் பேரையூர், சின்னாறு, எறையூர், திருமாந்துறை, லப்பைக்குடிக்காடு, சு.ஆடுதுறை, அந்தூர், ஒகளூர், கல்லம்புதூர், சின்ன வெண்மணி, பெரியம்மாபாளையம், சொக்கநாதபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் அன்று காலை 9 முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் இருக்காது.