‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்................. நமதூரிலும் நமதூரைச்சுற்றியும் நடந்த மற்றும் நடைபெறயுள்ள நிகழ்வுகளை எங்களுக்கு அனுப்பித்தந்தால் அதை அன்புடன் வெளியிட காத்திருக்கிறோம்.இந்த தளத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை அன்போடு வரவேற்கிறோம்.

Friday 21 September 2012

தமிழகத்தில் சூரிய ஒளியால் இயங்கும் பள்ளி

அணுவுலை வந்தாதான் மின்சாரம் வரும்னு நம்புற அறிவாளிகளே , திருவண்ணாமலை மாவட்டம் வேடப்பனுர் கிராமத்தில்"அருணாச்சலா வில்லேஜ் ஸ்கூல்" உள்ளது. தமிழகத்திலேயே முதன் முறையாக சோலார் சிஸ்டம் மூலம் இயங்கும் பள்ளி என்ற பெருமை இப்பள்ளிக்கே உண்டு.தேவையான மின்சாரத்தை சூரிய ஒளி மூலமே பெற்றுக் கொள்கிறார்கள் என்பதோடு மட்டுமல்லாமல்,தமிழகத்திலேயே 1 ரூபாய் கூட வாங்காமல் இலவச ஆங்கிலவழிக் கல்வியைத் தரும் தனியார் பள்ளி என்ற பெருமையும் உண்டு.
கிராமப்புற மாணவர்கள் மட்டுமே படிக்கும் இங்கு, ஒவ்வொரு மாணவருக்கும் 1 லட்சம் ரூபாய் வங்கியில் இன்சுரன்ஸ் செய்துள்ளது இப்பள்ளி நிர்வாகம்.மற்ற நாடுகளை விட நம் நாட்டில் சூரிய ஆற்றல் அதிகமாகவே கிடைக்கிறது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது

Followers