தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம்09/09/2012 ஞாயிற்றுக்கிழமையன்று லெப்பைக்குடிக்காடு கிளை தவ்ஹீத் மர்கஸில் காலை10:30 மணியளவில் மாவட்ட தலைவர் அஸ்ரப் அலி அவர்களின் தலைமையில் மாவட்ட நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்றது. இதில்,
1. மாவட்ட மற்றும் கிளைகளின் கணக்குகள் சரிபார்க்கப்பட்டது.
2. ஃபித்ரா கணக்குகள் வாசிக்கப்பட்டது.
4. தாஃவா பணிகளை மாவட்டத்தில் இன்னும் அதிகப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
5.புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அரியலூர் கிளை பற்றி அறிமுகப்படுத்தப்பட்டது.
6. செந்துறை கிளை ஆரம்பிக்கும் வரை சகோதரர் முஸ்தஃபா (9600213847) அவர்களை பொறுப்பாளராக நியமிப்பதென்று தீர்மானிக்கப்பட்டது.
7. வி.களத்தூர் மர்கஸை பார்வையிட்டு விரைவில் ஐவேளை தொழுகையும் ஜூம் ஆவும் தொடங்குவதென்று ஆலோசிக்கப்பட்டது.
8. கிளைகள் தோரும் சுவர் விளம்பரம் மூலம் தாஃவா செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
9. மாவட்ட சட்ட ஆலோசகர் ஒருவரை ஜமாஅத்திற்கு நியமிப்பது குறித்து மாநில செயற்குழுவில் வலியுறுத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்திற்கு பெரம்பலூர், புதுஆத்தூர், விகளத்தூர், கொளக்காநத்தம், அம்பளவர்கட்டளை, செந்துறை மற்றும் லெப்பைக்குடிக்காடு கிளையை சேர்ந்த செயல்வீரர்கள் கலந்து கொண்டார்கள்.
இக்கூட்டதிற்கு லெப்பைக்குடிக்காடு கிளை சகோதரர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
நன்றி
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது