‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்................. நமதூரிலும் நமதூரைச்சுற்றியும் நடந்த மற்றும் நடைபெறயுள்ள நிகழ்வுகளை எங்களுக்கு அனுப்பித்தந்தால் அதை அன்புடன் வெளியிட காத்திருக்கிறோம்.இந்த தளத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை அன்போடு வரவேற்கிறோம்.

Sunday 25 November 2012

இறப்புச்செய்திகள் - 25/11/12

மேற்கு காயிதே மில்லத் தெருவைச் சேர்ந்த  தோலி (மர்ஹூம்) ஹாஜா மொய்தீன் அவர்களின் மகனும் தோலி முஹம்மது இஸ்மாயில் மற்றும் ஜாஹீர் ஹுசைன் ஆகியோரின் தந்தையுமான  முஹம்மது இப்ராஹீம் அவர்கள் இன்று (25-11-12, ஞாயிற்றுக்கிழமை) மதியம் வபாத்தாகி விட்டார்கள்.
 
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
 
அவர்களது ஜனாஸா நாளை (26.11.2012, திங்கட்கிழமை) காலை மேற்கு பள்ளிவாசலில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. 
 
அவர்களின் மறு உலகின் நற்பேருக்காக எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துஆ செய்ய கேட்டுக்கொள்கிறோம்.
 
 
 

Saturday 24 November 2012

இறப்புச்செய்திகள் 24-11-12

மேற்கு காயிதே மில்லத் தெருவைச் சேர்ந்த நூர்கனி (மர்ஹூம்) தாஜ்தீன் அவர்களின் மனைவியும் (சுபேதார் உசேன் மகள்) மற்றும் ஜின்னா, ஹாஜா மொய்தீன், சபியுல்லாஹ் ஆகியோரின்  தாயாருமாகிய நூர்கனி பாத்திமாஜான் அவர்கள் இன்று (24-11-12, சனிக்கிழமை)  காலையில் வபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அவர்களது  ஜனாஸா இன்று (24-11-12, சனிக்கிழமை)  மாலையில் மேற்கு பள்ளிவாசலில்  உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவர்களின் மறு உலகின் நற்பேருக்காக எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துஆ செய்ய கேட்டுக்கொள்கிறோம்

Friday 23 November 2012

இறப்புச்செய்திகள்

கிழக்கு நடுத்தெருவைச் சேர்ந்த கோஸ்கனி (மர்ஹூம்)ஜமால் முஹம்மது அவர்களின் மகன்  டாக்சி காதர் என்று நமதூரில் பரவலாக அறியப்படும் கோஸ்கனி அப்துல் காதர் அவர்கள் நேற்று (22-11-12, வியாழக்கிழமை) இரவு  இரவு வபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி  வஇன்னா இலைஹி ராஜிஊன்.
 
அன்னாரது ஜனாஸா இன்று (23-11-12, வெள்ளிக்கிழமை) மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு கிழக்கு ஜூம்மா பள்ளியில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
அவர்களின் மறு உலகின்  நற்பேருக்காக எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துஆ செய்ய கேட்டுக்கொள்கிறோம்.
 
 
 
 

உதவாக்கரை இந்திய ராணுவத்தை தூக்கி பிடிக்கும் துப்பாக்கி!

உதவாக்கரை இந்திய ராணுவத்துக்கு வலுசேர்க்கும், அவர்களை தூக்கி பிடிக்கும் ஒருபடமே துப்பாக்கி.

தமிழக மீனவர்கள் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டனர். எங்கே மாயமாய் மறைந்து போனது இந்திய ராணுவம், இதையெல்லாம் படமாக எடுப்பார்களா?

இந்திய ராணுவம் ஈழத்த்து பெண்களையும், காஷ்மீரிய பெண்களையும், சத்தீஸ்கர் பழங்குடி பெண்களையும் கற்பழித்து கொன்ற வரலாற்றை படமெடுக்கும் தைரியம் தாணுவுக்கு உண்டா? அதை டைரெக்சன் செய்யும் வல்லமைதான் முருகதாசுக்கு உண்டா? அப்படிப்பட்ட ஒரு படத்தில் நடிக்கத்தான் நமது காமடி பீஸ் விஜய் சம்மதிப்பாரா?

கசாபுக்கு தூக்குதண்டனை சரியா? தவறா?

போபால் விசவாய்வு கசிவில் பல்லாயிர கணக்கான மக்களை கொன்ற அமெரிக்கர் அன்டர்சன் சுகமாக வழியனுப்பி வைக்கப்பட்டார். கசாபுக்கு அவசர அவசரமாக தூக்கு!

மனசாட்சி இல்லாத அரசியல்வாதி: கசாப்புக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியிருப்பதன் மூலம் நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்துள்ளது. கசாப் பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும்.

இந்தியாவை அழிக்க நினைத்தவன் கொல்லப்பட்டிருப்பதை கண்டு மகிழ்கிறேன். இந்த தண்டனை மக்கள் முன்னிலையில் நிறைவேற்றி இருக்கப்பட வேண்டும். அப்படி நிறைவேற்றி இருந்தால் நமது நாட்டில் உயிரிழப்பை ஏற்படுத்துபவர்களுக்கு அது பாடமாக அமையும் என அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார்.

வெட்கப்படாத ஒரு தேசம்!

தடுமாறும் நீதி: சாபுக்கு தூக்கு கொடுத்த நீதிக்கு, மும்பை, பாகல்பூர், பீவாண்டி, குஜராத், கோவை, என்று பல்வேறு கலவரங்களை நடத்தி பல்லாயிர கணக்கில் சிறுபான்மை மக்களை கொன்று குவித்த மோடி, அத்வானி கூட்டத்திற்கு தூக்கு கொடுக்க முடியவில்லை.

காவலில் கருத்து சுதந்திரம்: தாக்கரே மறைவுக்கு மகாராஷ்டிராவில் பெரிய பந்த் நடைபெற்றது. இதை பற்றி ஒரு பெண் தனது பேஸ்புக்கில் தாக்கரேவின் மறைவுக்காக முழு அடைப்பு தேவையில்லை, பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் வெள்ளையர்களால் தூக்கிலடப்பட்ட போது நாம் இதுபோல் எதுவும் நடத்தவில்லையே என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவிற்கு பேஸ்புக்கில் இவரது தோழி ரேணுகா ‘லைக்’ கொடுத்தார்.

Thursday 22 November 2012

மின்சார ராசிபலன்


ஹைதராபாத்தை சேர்ந்த ஒர் கிறிஸ்தவ குடும்பமே துபையில் இஸ்லாத்தை தழுவியது...! மாஷாஅல்லாஹ்..!!

துபையில் உள்ள இஸ்லாமிய வழிகாட்டி மையத்தில் ஹைதராபாத்தை சார்ந்த கிருஸ்தவ (புரட்டஸ்டன்ட்) பிரிவில் இருந்து, ஐந்து உறுபினர்களை கொண்ட ஒரு குடும்பமே இஸ்லாத்தை தழுவியது. இந்த மையத்தில் தினமும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம் என்றாலும் இது போன்று முழு குடும்பமுமே இஸ்லாத்தை தழுவியது மகிழ்ச்சி அடைய செய்கின்றது.

ஹைதராபாத்தை சேர்ந்த ஜேம்ஸ் என்கின்றவர் தன் குடும்பத்துடன் துபையில் வசித்து வருகின்றார். இவருக்கு மனைவியும், மகளும், மகனும் உள்ளனர். மகன் திருமணமாகி இவரும் மனைவியுடன் வசித்து வருகின்றார். இந்த குடும்பம்தான் தற்போது இஸ்லாத்தை தழுவி முறையே தந்தை முஹம்மது என்றும், இவரின் மனைவி மரியம் என்றும், மகள் ஆயிஷா என்றும் மகன் ஈஸா என்றும் இவரின் மனைவிக்கு சாரா என்றும் அழகான இஸ்லாமிய பெயர்களை சூட்டி தங்களை இஸ்லாமிய குடும்பத்துடன் இணைத்து கொண்டுள்ளனர்.

ஆஷுரா நோன்பு

ரமலான் மாதத்தில் வைக்கப்படும் நோன்பிற்கு பிறகு சிறந்தது, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் வைக்கப்படும் நோன்பாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அபூஹுரைரா(ரலி) முஸ்லிம் 1962)

ஆஷுரா தினத்தில் வைக்கப்படும் நோன்பு கடந்த ஒரு வருடத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாகும் எனக் கூறினார்கள்.
(அபூகதாதா(ரலி) முஸ்லிம் 1977)

அமீரகத்தில் ஆஷுரா நோன்பு
 
முஹர்ரம் மாதத்தின் 9 மற்றும் 10 ஆகிய நாட்களாக உள்ள நவம்பர் 23 மற்றும் 24 (வெள்ளி மற்றும் சனி கிழமை) ஆகிய தினங்களில் அமீரகத்தில்  இரண்டு நாட்கள் நோன்பு நோற்க்க வேண்டும்.
 
தமிழகத்தில் ஆஷுரா நோன்பு 

 முஹர்ரம் மாதத்தின் 9 மற்றும் 10 ஆகிய நாட்களாக உள்ள நவம்பர் 24 மற்றும் 25 (சனி மற்றும் ஞாயிற்றுகிழமை) இரண்டு நாட்கள் நோன்பு நோற்பது நபி வழியாகும்.

Wednesday 21 November 2012

உலக பயங்ரகவாதி இஸ்ரேலுக்கு எதிராக சைபர் யுத்தம், 663 இஸ்ரேல் இணையதளங்கள் hack செய்யப்பட்டுள்ளது!

இன்று (19-11-2012) காலை இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்

உலக பயங்ரகவாதி இஸ்ரேல் கடந்த புதன் கிழமையிலிருந்து பாலஸ்தீன நாட்டில் காசா பகுதிகளில் ராக்கட்டுகள் மூலம் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றது

பிஞ்சு குழுந்தைகள், பெண்கள், அப்பாவி மக்கள் உள்பட பல பாலஸ்தீன பொதுமக்கள் இதில் கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இன்று காலையில் கூட காரில் சென்ற 3 நபர்கள் பயங்ரமாக கொள்ளப்பட்டுள்ளனர்.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக சைபர் யுத்தம் ஆரம்பமாகியுள்ளது. இஸ்ரேல் நாட்டின் 663 இணையதளங்கள் hack செய்யப்பட்டுள்ளனது.

பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து முற்றுகைப் போராட்டம்

முற்றுகை போராட்டம்
 
பாலஸ்தீனத்தில் அப்பாவி முஸ்லிம்களை குண்டு வீசி கொன்றொழிக்கும் பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்தும், இஸ்ரேலின் உடனான தூதரக உறவை மத்திய அரசு உடனே துண்டிக்க வலியுறுத்தியும்

ஆளுநர் மாளிகை முற்றுகை
 
இன்ஷா அல்லாஹ்
கண்டன உரை : பீஜே
நாள் : 24.11.12 – சனிக்கிழமை
நேரம் : காலை 11 மணி
இடம் : பனகல் மாளிகை, சைதாப்பேட்டை பேருந்து நிலையம் அருகில்.
 
அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

முஸ்லிம்களை சீண்டும் கூத்தாடிகளின் கொட்டத்தை ஒடுக்குவது எப்படி? - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

துப்பாக்கி என்ற படம் வெளிவந்து சிலர் போராட்டம் நடத்திய பிறகுதான் இது குறித்து நமக்கு தகவல் வந்தது. அந்தப் படத்தில் முஸ்லிம்களை எவ்வாறு சித்தரித்துள்ளார்கள் என்பதை நாம் இன்று வரை பார்க்கவில்லை. ஆனாலும் பல சகோதரர்கள் அதைப் பார்த்து அந்தப் படம் ஒட்டு மொத்த முஸ்லிம்களையே பயங்கரவாதிகளாகவோ அல்லது பயங்கரவாதிகளுக்கு ஆதரவாளராகவோ காட்டியுள்ளது என்று தெரிவித்தனர்.
 
அப்படியானால் எங்கும் அந்தப் படத்தை திரையிட முடியாத அளவுக்கு கடுமையான எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்று 15 – 11- 12 அன்று கூடிய அவசர நிர்வாகக் குழுவில் முடிவுசெய்யப்பட்டது.
 
20.11.12 – செவ்வாய்க்கிழமை அன்று அந்தப் படம் திரையிடப்பட்டுள்ள அனைத்து திரையரங்குகளையும் முற்றுகையிட்டு கடும் கண்டனத்தைப் பதிவு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் தொடர்ச்சியாக தினந்தோறும் முற்றுகை இடுவது எனவும் தீர்மானித்து காவல்துறையிலும் 15 ஆம் தேதி அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டது.

மும்பை பந்த் - பெண் கைது: நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கின்றோமா? முதல்வர் சவானுக்கு கட்சு கடிதம்!

மார்கண்டேயன் கட்சு
Press Council of India வின் தலைவரும் முன்னால் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான மார்கண்டேயன் கட்சு மஹராஷ்ட்ரா அரசை கடுமையாக சாடி நேற்று கடிதம் அனுப்பியுள்ளார்.

 
மஹராஷ்ட்ரா முதல்வர் சவானுக்கு அவர் அனுப்பிய கடிதத்திற்கு (மெயில்) உரிய முறையில் பதில் கிடைக்காததால் அடுத்த 5 மணி நேரத்தில் மிகவும் ஆத்திரமடைந்து மற்றுமொரு கடிதத்தை முதல்வருக்கு (மெயில்) அனுப்பியுள்ளார்.
 
தனது ப்ளாகில் முதல்வருக்கு அனுப்பிய இரண்டு கடிதத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
 
 
பால்தாக்ரேயின் மரணத்தை தொடர்ந்து ஒரு நாள் அறிவிக்கப்படாத பந்தி்னால் மும்பையில் கடைகள் மூடப்பட்டன.
 
ஒருவரின் மரணத்திற்காக இது போன்று பொதுமக்களுக்கு பாதிப்பு தரும் வண்ணம் கடைகளை மூடுவது சரியல்ல என்ற கருத்தில் ஒரு பெண் கருத்து தெரிவித்து இருந்தார்.

Friday 16 November 2012

நமதூரில் சுவர் விளம்பரம் மூலம் தாவா

நமதூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மூலம் ஊர் முழுவதும் சுவர்
விளம்பரம் மூலமாக தாவா பணி செய்யப்பட்டது.
 
இதை அந்த வழியாக செல்லக்கூடிய அனைத்து சகோதரர், சகோதரிகளும்
பார்த்து படித்து பலன் பெறுகின்றனர்.

மாற்று மத சகோதரருக்கு தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் கிளை சார்பாக ஜவஹர் என்ற பிறமத சகோதரருக்கு கடந்த 01/11/2012 அன்று திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா செய்யப்பட்டது.
 
அல்ஹம்துலில்லாஹ்...

ஆஷுரா நோன்பு - நவம்பர் 24 மற்றும் 25

பிறை தேட வேண்டிய நாளான நவம்பர் 15 ஆம் தேதி வியாழக்கிழமை மஹரிபிற்கு பிறகு தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், கன்னியாகுமரி, புதுவை, காரைக்கால் உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் பிறை தென்பட்டதை அடுத்து நவம்பர் 15 ஆம் தேதி வியாழக்கிழமை மஹரிபிலிருந்து முஹர்ரம் முதல் பிறை தமிழகத்தில் ஆரம்பமாகியுள்ளது என்பதனை தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.

ஆஷுரா நோன்பு :

அந்த அடிப்படையில் முஹர்ரம் மாதத்தின் 9 மற்றும் 10ஆகிய நாட்களாக உள்ள நவம்பர் 24 மற்றும் 25 (சனி மற்றும் ஞாயிற்றுகிழமை) இரண்டு நாட்கள் நோன்பு நோற்பது நபி வழியாகும்.
நன்றி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.

கிழக்கு நடுத்தெருவில் ஜூம்ஆ தொழுகை ஆரம்பம்



ஆஷூரா நோன்பு...................!!!!

அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே! மறந்து விடாதீர்கள்....!!
மறந்தும் இருந்துவிடாதீர்கள்!...

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆஷூரா!... நோன்பு நோற்பதை
நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள்.

ரமலான் நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள்.
அது தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டு விட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டு விடட்டும். என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 1592

Thursday 15 November 2012

அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 5,000 தமிழர்கள் ஊர் திரும்புகின்றனர்

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலைக்கு சென்று அங்கு சட்டவிரோதமாக தங்கியுள்ள 5,000 தமிழர்கள் உள்பட பல இந்தியர்கள் விரைவில் ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு  பொதுமன்னிப்பு அளிக்கப்படுவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது. அதன்படி சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதியில் இருந்து 2 மாத காலத்திற்குள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும். அவர்களுக்கு எந்தவித அபராதமும் விதிக்கப்படாது. இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியேறாவிட்டால் சிறை தண்டனை மற்றும் அபராதம் உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு சட்டவிரோதமாக தங்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 5,000 பேர் உள்பட ஏராளமான

இக்வான்களின் இரட்டை முகம்

22/3/2004 அன்று இஸ்ரேலின் தாக்குதலில் பாலஸ்தீனின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் அஹ்மத் யாசீன் அவர்கள் படுகொலை செய்யபட்டார்கள்.அவரின் சிதைந்த உடலில் எடுக்கப்பட்ட பகுதில் பெரிய பகுதியாக ஐநூறு கிராம் அளவே இருந்தது.
கேடுகெட்ட இந்த இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து 23/3/2004 ஆம் திகதி எகிப்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது அதில் இக்வான்களின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
அவர்களில் தற்போது இக்வான்களின் மிக முக்கிய பிரமுகரான இசாம் அல் உர்யான் உட்பட பலர் கலந்துகொண்டு இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டித்தனர்.அந்த ஆர்பாட்டத்தில் இக்வான்களின் தலைவர்கள் வைத்த கோரிக்கையை இங்கு பதிகிறேன்.

யார் தீவிரவாதி.............???

பொதுமக்கள் முன்னிலையில், மீடியா முன்னிலையில் நேரடி விவாதத்திற்கு தயாரா..........???
 நடிகர் விஜய், இயக்குனர் முருகதாஸ் அவர்களே!!
 
இஸ்லாமியர் என்றால் தீவிரவாதியா ? நீங்கள் உண்மையான செய்தியை தான் சொன்னீர் என்றால் யார் தீவிரவாதிகள் என்று விவாதிக்க தயாரா ?
உன்னையும் உன்னை போன்ற காவி பயங்கரவாதிகளின் முகத்திரையும்
கிழித்தெறியப்படும்,
ராணுவத்துறையில் எங்களுக்கு கிடைக்கவேண்டிய (இடஒதுகீட்டின் அடிப்படையில் கூட) வேலை கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் எங்கள் சமுதாயத்தை இந்த அளவுக்கு புறம் தள்ள யாரிடம் பாடம் கற்றாய்?
யார் தீவிரவாதி? பொதுமக்கள் மற்றும் மீடியா முன்னிலையில் விவாதிக்க தயாரா?

Wednesday 14 November 2012

இஸ்லாத்தை ஏற்ற ஜூலியா ரேக்வாவா

மாஷா அல்லாஹ் ..!

2009 ம் ஆண்டு ரஷ்யா விளையாட்டு போட்டியில் (wrestlers of 59 kg) சாம்பியன் பட்டம் வென்ற சுவிடன் நாட்டை சேர்ந்த சகோதரி ஜூலியா ரேக்வாவா இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ்..!!

பாறைக்குள் வேரைப்போலே...

அரேபிய தீப கற்பத்தில் குறைஷி கோத்திரம் உயர்ந்த கோத்திரமாக காணப்பட்டது.இவர்களின் காலப்பகுதி ஜாஹிலிய மௌடீக காலப்பகுதியாக இஸ்லாமும் வரலாறும் சொல்கின்றது. ஆனால் இவர்களிடம் வியாபாரம் சிறந்து காணப்பட்டது. அதனால் மிதமிஞ்சிய பொருளாதாரம் இவர்களிடம் மேலோங்கியது. இவர்களின் சமூக நிலை ஓரளவு சிறந்திருந்தாலும் மார்க்கம் என்பது மிகவும் சீரழிந்தே காணப்பட்டது.
தமது மூதாதையர் மார்கத்தை பின்பற்றுவதில் இவர்களுக்கு அவ்வளவு அலாதிப்பிரியம். சிலை வணக்கத்தில் மூழ்கி கிடந்தனர். லாத், உஸ்ஸா போன்ற சிலைகளை கடவுளாக கொண்டனர். கோத்திர ஒற்றுமை இவர்களின் பலம். இந்த சமுதாயத்தில்தான் முஹம்மத் நபி ஸல் நபி ஸல் பிறக்கின்றார்.சிறுவயதிலே தாயை தந்தையை இழந்த இவர் தனது பாட்டனாரின் அரவணைப்பில் அன்பு ஆதரவாக வளர்ந்தார். அந்த சமூகத்தில் உண்மையாளர் நம்பிக்கையாளர் என்று புகழப்பட்டார்.
திடீரென்று இவர் நிலை மாற்றம் அடைகிறது. அன்பு காட்டி வந்த இந்த மக்களே இவரை வெறுக்க ஆரம்பிக்கின்றனர். நம்பிக்கையாளர் உண்மையாளர் என்று சொன்ன அதே சமுதாயம் இவரின் நம்பக தன்மையை மக்களில் இருந்து அகற்ற முயற்சி செய்கிறது. இவருக்கு எதிராக கூட்டங்களும் சதிகளும் நடந்தவண்ணம் இருந்தது .
இந்த கெடுபிடிகளுக்கு காரணம் இந்த முஹம்மத் நபி (ஸல்) தான். அப்படி அவர் என்ன செய்தார் புகழப்பட்ட வாயாலேயே இகழப்பட காரணம் என்ன ?
காரணம்....

தரங்கெட்ட அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம்....!!மாமனிதர்!... நபிகள் நாயகம் {ஸல்} அவர்கள்!...

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். கரைப்பகுதி கடினமான நஜ்ரான் நாட்டுப் போர்வை ஒன்றை அவர்கள் அணிந்திருந்தார்கள். அப்போது எதிரே வந்த கிராமவாசி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் போர்வையுடன் சேர்த்துக் கடும் வேகமாக இழுத்தார். இழுத்த வேகத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கிராமவாசியின் மார்பில் சாய்ந்தார்கள்.
 
அவர் கடுமையாக இழுத்ததன் காரணமாகப் போர்வையின் கனத்த கரைப்பகுதி அவர்களின் தோள்பட்டையைக் கன்றிப்போகச் செய்தது. பிறகு கிராமவாசி, ‘முஹம்மதே! உம்மிடமுள்ள செல்வத்தில் எனக்கும் தருமாறு கட்டளையிடுவீராக!’ என்று கூறினார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தார்கள். பிறகு அவருக்கு ஏதேனும் வழங்குமாறு கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் அனஸ் (ரலி) அவர்கள்:
நூல்கள்: புஹாரி 6088, முஸ்லிம் 2296.

மேற்கண்ட நபிமொழியிலிருந்து
நாம் பெறவேண்டிய படிப்பினைகள் ஏராளம்!...

Tuesday 13 November 2012

இறப்புச்செய்திகள் - 13/11/12

மேற்கே காயிதே மில்லத் தெருவைச் சேர்ந்த   வெண்பாவூர் (மர்ஹூம்) அப்துல் கரீம் (முஅத்தீன்) அவர்களின் மனைவியும்,   அப்துல் சுபஹான் ( மேற்கு பள்ளிவாசல் பழைய முஅத்தீன்) மற்றும் அப்துல்லாஹ் ஆகியோரின் தாயாருமாகிய ரஹ்மான்மா அவர்கள் இன்று (13-11-12) செவ்வாய்க் கிழமை இரவு  வபாத்தாகி விட்டார்கள்.
 
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
 
அவர்களது ஜனாஸா நாளை (14.11.2012)  புதன்  கிழமை  மாலை மேற்கு  பள்ளிவாசலில்  உள்ள கப்ருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
 
அவர்களின்  மறு உலகின் மறுஉலகின் நற்பேருக்காக எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துஆ செய்ய கேட்டுக்கொள்கிறோம்.
 

Friday 9 November 2012

இஸ்லாமிய ஆண்டு உருவான வரலாறு

 மகத்தான படைப்பாளன் எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகிறான்
 
  வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரெண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி ( 9:36 )
 
  ஆண்டுக் கணக்குகளின் துவக்கத்தை பெரும்பாலும் முக்கிய நிகழ்ச்சியை கவனத்தில்; கொண்டு ஆரம்பம் செய்துள்ளனர். ஈஸா நபியின் பிறப்பை அடிப்படையாக வைத்து கிறிஸ்தவர்கள் ஆண்டை கணக்கிட்டுள்ளனர். கி.பி. (கிறிஸ்து பிறப்புக்கு பின்) கி.மு. (கிறிஸ்து பிறப்புக்கு முன்) என்று குறிப்பிடுகின்றனர். இந்த நடைமுறையே இன்று பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
 
  இஸ்லாமியர்கள் ஹிஜ்ரி ஆண்டு என்று குறிப்பிடுகின்றனர்.இந்த ஹிஜ்ரி ஆண்டு எப்படி வந்தது? என்பது இஸ்லாமியர்களில் பலருக்கே தெரியாது.இந்த ஹிஜ்ரி ஆண்டு எப்படி வந்தது என்பதை நாம் விரிவாக காண்போம்.
 
  நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த வரை இந்த ஹிஜ்ரி ஆண்டு இருந்ததில்லை. மேலும் ஆண்டின் முதல் மாதம் என்பது முஹர்ரம் என்றும் இருக்கவில்லை. நபிகளாரின் காலத்தில் யானை ஆண்டு என்றே குறிப்பிட்டு வந்தனர்.
 
  நபி(ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்னர் அப்ரஹா என்ற மன்னன் யானைப் படையுடன் கஅபத்துல்லாஹ்வை அழிக்க வந்த போது அல்லாஹ் பறவைகள் மூலம் அந்தப் படையை முறியடித்தான். (திருக்குர்ஆனின் 105வது அத்தியாயம் இது தொடர்பாக பேசுகிறது.

விஸ்வரூபம் திரைப்படம்: முதலில் எங்களுக்கு காண்பிக்கப்படவேண்டும்-தமுமுக கோரிக்கை

 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ். ரிபாயி வெளியிடும் அறிக்கை:
 
பிரபல திரைப்பட நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் என்ற படத்தை நடித்து இயக்கியிருக்கிறார். அதில் ஆப்கானிஸ்தான் போரை முன்னிலைப்படுத்தி கதை இருப்பதாகவும் அதில் முஸ்லிம்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
கடந்த பல வருடங்களாக தமிழகத்தில் சிலர் தங்களின் பிழைப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் முஸ்லிம்களை மட்டுமே குற்றவாளிகளாக சித்தரித்து படம் எடுத்து வருகிறார்கள். ஈராக்கில் 6 லட்சம் மக்களை கொன்ற அமெரிக்க பயங்கரவாதம் பற்றியோ, 60 ஆண்டுகளுக்கு மேலாக பாலஸ்தீனர்கள் மீது இன அழிப்பை நடத்தி வரும் இஸ்ரேலின் பயங்கரவாதம் பற்றியோ யாருக்கும் படம் எடுக்க மனமில்லை, துணிவில்லை. இந்தியாவில் குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை தோலுரிக்க தைரியமில்லை.

நாங்கள் இந்தியாவிற்கு எதிரான இயக்கம் இல்லை - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

 
தகவல்:
அ.முஹம்மது உசேன்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

Thursday 8 November 2012

இகாமத்துக்குப் பின் சுன்னத் தொழலாமா?

கடமையான தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டவுடன் வேறு எந்தத் தொழுகையும் தொழக்கூடாது என்றும், இகாமத் சொல்லப்படும் போது யாராவது சுன்னத்தான தொழுகைகளை தொழுது கொண்டிருந்தால் அதையும் விட்டுவிட வேண்டும் என்றும் சில உலமாக்கள் சட்டம் சொல்கின்றார்கள். இது தொடர்பாக தெளிவான நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் கடமையான அந்தத் தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் (1281))
 
மேற்கண்ட செய்தியை அடிப்படையாக வைத்துத் தான் குறிப்பிட்ட சட்டத்தை சொல்கின்றார்கள்.ஆனால் உண்மையில் குறிப்பிட்ட ஹதீஸ் சொல்லும் செய்தி என்ன?
 
இகாமத் சொல்லப்பட்ட பின்பு கடமையல்லாத வேறு எந்தத் தொழுகையையும் ஆரம்பிக்கக் கூடாது என்பதே மேற்கண்ட செய்தியின் கருத்தாகும்.

facebookமூலம் நன்மைகள் இருந்தாலும் தீமையும் இருக்கின்றன ..! உஷார் சகோதர ..!சகோதரிகளே ..!

ஆபாச படத்திற்காக இந்தோனேஷிய சிறுமிகளை பிடிக்க பேஸ்புக் மூலம் வலை..!

பேஸ் புக் போன்ற சமூக இணையதளங்களில் சிக்கும் சிறுமிகளை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து படம் பிடிப்பதும், விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் சம்பவங்களும் இந்தோனேஷியாவில் அதிகரித்து வருகிறது.
பேஸ் புக், டுவி்ட்டர் போன்ற சமூக இணையதளங்கள் தற்போது இளம் தலைமுறையினர் இடையே வேகமாக பரவி வருகிறது. உலகில் எங்கோ இருக்கும் நபருடன் நட்பு கொள்ள உதவும் சமூக இணையதளங்கள், பல நன்மைகளை ஏற்பட்டாலும், சில தீமைகளும் ஏற்பட தான் செய்கிறது.
இந்தோனேஷியா நாட்டில் சமீபகாலமாக காணாமல் போன இளம்வயதினர் குறித்து அந்நாட்டு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு கமிஷன் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காணாமல் போன 129 குழந்தைகளில் 27 பேருக்கு பேஸ்புக் பயன்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது. பேஸ்புக்கில் அறிமுகமாகும் நபர்களின் அழைப்பை ஏற்கும் இவர்கள், கடத்தப்படுவது தெரிய வந்துள்ளது.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுப்பதற்காக வந்த முஸ்லிம்கள் தொழுகை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட வருவாய் அதிகாரி கஜலட்சுமி தலைமையில் நேற்று முன்தினம் காலை நடந்தது. அப்போது, தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருப்பூர் மாவட்ட தலைவர் சேக்பரீத், செயலாளர் ஜாக்கீர் அப்பாஸ், பொருளாளர் முஜிபுர் ரகுமான் ஆகியோர் தலைமையில் 200 பெண்கள் உள்பட 600–க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத் துக்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் முஸ்லிம்கள் கடந்த பல வருடங்களாக திருப்பூர் நொய்யல் வீதி அரசு பள்ளி மைதானத்தில் பல ஆண்டுகளாக ரம்ஜான் மற்றும் பக்ரீத் தொழுகைகளை நடத்தி வந்து உள்ளோம். அதே பள்ளிக்கூடத்தில் கடந்த மாதம் 27–ந் தேதி காலை 7 மணிக்கு பக்ரீத் தொழுகை நடத்த சென்ற போது ‘அரசு பள்ளி வளாகங்களில் மதவழிபாடு நடத்த மாவட்ட கலெக்டர் தடைவிதித்து உள்ளதாக கூறி போலீசார் தடுத்தனர்.

தொழுகை நடத்த அனுமதி

ஆனால் அரசு அலுவலகங்கள், போலீஸ் நிலையங்களில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை நடத்துவது நடைமுறையில் உள்ளது. சில அரசு அலுவலக வளாகங்களில் நிரந்தரமாக மத வழிபாட்டு தலங்கள் உள்ளன. இவை அனைத்தும் சட்ட மீறல்களாகும்.

மண்ணுக்குள் தோண்டிப் பார்த்து வேதனை செய்யப்படுவதைக் காட்ட முடியுமா?

கேள்வி:
மண்ணுக்குள் தோண்டிப் பார்த்து வேதனை செய்யப்படுவதைக் காட்ட முடியுமா?

பதில்:
நல்லவர் கெட்டவர் அனைவரும் மண்ணறை வாழ்க்கையை அனுபவிக்கின்றனர் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை.

குறிப்பாக, கெட்டவர்கள் மண்ணறை வேதனையிலிருந்து தப்பவே முடியாது என்பதற்கும் இஸ்லாத்தில் ஆதாரங்கள் உள்ளன.

கெட்டவர்கள் பலர் தீயிட்டு சாம்பலாக்கப்படுகின்றனர். அவர்களின் சாம்பல்கள் பல பகுதிகளில் ஓடும் ஆறுகளில் கரைக்கப்படுகின்றன. இவர்கள் குறிப்பிட்ட இடத்தில் அடக்கம் செய்யப்படவில்லை. மாறாக நாட்டின் பல பகுதிகளிலும் இவர்களின் சாம்பல்கள் பரப்பப்பட்டுள்ளன. இவர்களுக்கு மண்ணறையே இல்லை என்பதால் மண்ணறை வேதனை கிடையாது எனக் கூறினால் அனைவரும் மண்ணறை வேதனையைச் சந்திப்பார்கள் என்ற ஆதாரங்கள் நிராகரிக்கப்பட்டு விடும்.

போலி ஹதீஸ்களும், சமூகத்தில் அதன் தாக்கங்களும்!

குர்ஆன், ஹதீஸ் என்ற அடிப்படையான இரண்டு மூலாதாரங்களின் மீதுதான் இஸ்லாம் எனும் கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது. குர்ஆனைப் பொறுத்தவரையில் அது அல்லாஹ்வின் ‘கலாம்’ பேச்சு என்பதால் அதில் யாரும் எந்தக் குளறுபடிகளும் செய்துவிட முடியாது. 1400 வருடங்களாக எத்தகைய இடைச்செருகல்களுக்கோ, கூட்டல் குறைத்தல்களுக்கோ உள்ளாகாமல் அட்சரம் பிசகாமல் அப்படியே அது பாதுகாக்கப்பட்டுள்ளது.

ஆனால், இரண்டாவது மூலாதாரமான ஹதீஸைப் பொறுத்தவரை அதன் கருத்து வஹி மூலம் பெறப்பட்டதாயினும் வாசக அமைப்பு நபிகளாருடையதாகும். நபி(ஸல்) அவர்களது மரணத்திற்குப் பின்னர் ஹதீஸை அறிவித்த அறிவிப்பாளர்களின் சில பலவீனங்களினால் ஹதீஸின் சில வாசகங்கள் விடுபட்டு, அல்லது மேலதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இவை அறிஞர்களால் ஒப்பீட்டாய்வின் மூலம் திருத்தப்பட்டுமுள்ளன.

அதேவேளை இஸ்லாத்தின் எதிரிகளும், இஸ்லாத்தை அறியாத அறிவிலிகளும் சுயநலவாதிகளும் ஹதீஸ் என்ற பெயரில் போலியான செய்திகளை இட்டுக்கட்டி நபியவர்களின் பெயரில் பரப்பினர்.

மேட்டுப்பாளையத்தில் காவி பதற்றம் - அமைதி காக்க தமுமுக வேண்டுகோள்

கோவை மாவட்டம் மேட்டுப்பாலயத்தை சார்ந்த ஆனந்தன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தாலுகா செயலாளராக இருக்கிறார். கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் அவரை சிலர் தாக்கி இருக்கின்றனர்.

இதை வழக்கம்போல சமூக மோதல்களாக சங்பரிவார் அமைப்புகள் திரித்து பதற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள். தனி நபர மோதல்களை வன்முறையாக்க முயன்றுள்ளனர். சுற்று வட்டாரம் முழுக்க கடைகளை அடைத்து பொது மக்களை அச்சுறுத்தி உள்ளனர். மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்து அரசு பேருந்தை தீ வைத்து எரித்துள்ளனர். கோவை, ஊட்டி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற பேருந்துகளை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டுள்ளனர். சில இடங்களில் இந்து முன்னணியுடன் பொதுமக்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இன்று நீலகிரி, திருப்பூர், கோவை மாவட்டங்களில் 10 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளை உடைத்துள்ளனர்.

Wednesday 7 November 2012

இறப்புச்செய்திகள் - 07/11/12

மேற்கே காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த (வாட்டர் டேங்க் பின்புறம்)  சேலம் செல்வ முஹம்மது  அவர்களின் மனைவியும், ஷாகுல் ஹமீது,  தீன் முஹம்மது மற்றும்  சலீம் பாஷா  ஆகியோரின் தாயாருமாகிய  ஐசாகனி அவர்கள் இன்று (07-11-12) புதன் கிழமை காலையில் வபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் மறுமைவாழ்வின் நற்பேருக்காக எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துஆ செய்ய கேட்டுக்கொள்கிறோம்.

சவூதி அரேபியாவின் புதிய உள்துறை அமைச்சர் நியமனம்

சவூதி அரேபியாவின் புதிய உள்துறை அமைச்சராக முஹம்மத் பின் நாயிஃப் பின் அப்துல் அஸீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்துறை அமைச்சரும் பட்டத்து இளவரசராக இருந்தவருமான இளவரசர் நாயிஃப் பின் அப்துல் அஸீஸ் அகால மரணமுற்றதையடுத்து அவருடைய துணை அமைச்சரும் தந்தை வழி சகோதரருமான இளவரசர் அஹ்மது பின் அப்துல் அஸீஸ் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டிருந்தார்.
 
இந்நிலையில் கடந்த திங்களன்று மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் தனது புதிய உள்துறை அமைச்சராக நாயிஃப்பின் மகனும் உள்துறையில் உதவி அமைச்சராகப் பொறுப்பு வகித்தவருமான முஹம்மத் பின் நாயிஃப் பின் அப்துல் அஸீஸை நியமித்து உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, இளவரசர் அஹ்மது கேட்டுக்கொண்டதன் பேரிலேயே அவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதாக சவூதி செய்தி முகவம் தெரிவித்துள்ளது.

மின்சாதனங்கள்.. உஷார் டிப்ஸ்!

‘மின்சாரம் இல்லாமல் இன்றைய வாழ்வே இல்லை. நமக்கு வரமாகக் கிடைத்திருக்கிற மின்சாரத்தை, சாபமாக்கிக் கொள்ளாமல் அதை சரியாகப் பயன்படுத்தும் விதம் பற்றி எடுத்துச் சொல்கிறார்கள் நிபுணர்கள்.

மின்சாதனப் பொருள்களை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றிச் சொல்கிறார்,

ஐ.எஸ்.ஐ. முத்திரை இருக்கிறதா என்று பார்த்தே மின்சாதன பொருட்களை வாங்குங்கள்.

மூன்று பின்கள் உள்ள பிளக்&ஐயே பயன்படுத்துங்கள். ஸ்விட்ச் பாக்ஸ் தரைமட்டத்திலிருந்து 4 அடி உயரத்துக்கு மேல் இருக்கும்படி பொருத்துங்கள். விபரம் தெரியாத குழந்தைகளின் பாதுகாப்புக்கு இதுவே சிறந்த வழி.

ஸ்விட்ச் பாக்ஸை பொறுத்தவரை பாதுகாப்பான நிறைய வகைகள் இப்போது கிடைக்கின்றன. உதாரணமாக, பிளக்&ல் ‘பின்’ செருகும்போது துவாரப் பகுதி திறந்தும், பின்&ஐ வெளியே எடுக்கும்போது துவாரம் தானாகவே மூடும்படியான க்ளோசிங் வகை ஸ்விட்ச் பாக்ஸ்கள் உள்ளன. அவை மிகவும் பாதுகாப்பானவை.

போலி பெயர், முகவரி கொடுத்து சிம் கார்டு வாங்கினால்

போலி ஆவணங்களை கொடுத்து சிம் கார்டுகளை பெறுபவர்களை தடுக்கும் வகையில், தொலை தொடர்புத்துறை கடுமையான புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, வாடிக்கையாளர் வழங்கும் தவறான தகவல்களுக்கு சிம் கார்டு விற்பனையாளர்களே பொறுப்பாவார்கள்.

புதிய விதியின்படி, சிம் கார்டை விற்கும் அங்கீகாரம் பெற்ற முகவர் வாடிக்கையாளர் வழங்கும் விண்ணப்பத்தில் ஒட்டப்பட்டுள்ள புகைப்படத்தை

Tuesday 6 November 2012

Smartphone வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

வெறும் பேசுவதற்கு மட்டும் அலைபேசி என்று இருந்த காலம் எல்லாம் போய், எல்லாவற்றுக்கும் அலைபேசியே போதும் எனும் அளவுக்கு திகட்ட திகட்ட வசதிகளுடன் அலைபேசிகள் வந்துவிட்டன. அப்படிப்பட்ட Smartphone- களை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய தகவலகள் என்ன? பதிவில் அதை பார்ப்போம்.

ஏன் Smartphone ?
உங்களுடைய செயல்கள் அனைத்தையும் ஸ்மார்ட் ஆக செய்ய உதவுகிறது இது. எந்த ஒரு செயலுக்கும் தனித் தனியாக Application என்று கணினி போல இருப்பதால் மிக எளிதாக உங்கள் வேலை முடிந்து விடும். Smartphone- இல் பெரும்பாலான பயன்பாடுகள் இணையம் சார்ந்தே இருக்கும். உங்கள் தினசரி வேலையில் இருந்து, உங்கள் தொழில் வரை அனைத்துக்கும் உதவும் வகையில் செயல்படுகின்றன. எங்கே இருந்து வேண்டுமானாலும், நீங்கள் நினைத்த வேலையை செய்து முடித்திடலாம்.

விலை (Price) :
எல்லோருக்கும் முதலில் இதை சொல்லி விடுவது உத்தமமாய் இருக்கும். முதலில் நீங்கள் எவ்வளவிற்கு வாங்க போகிறீர்கள் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதன் பின் கீழே உள்ளவற்றை பொறுத்து உங்கள் பணத்திற்கு ஏற்ப ஒரு அலைபேசி வாங்கி விடலாம்.

இயங்கு தளம் (Operating System) :
எந்த ஒரு ஸ்மார்ட்போனும் ஏதேனும் ஒரு இயங்கு தளத்தில் (OS) தான் இயங்கும். இதில் பிரபலமானவை iOS, Android, Windows, Blackberry, Symbian. இதில் iOS என்பது ஆப்பிள் நிறுவன அலைபேசிகளில் மட்டும், Blackberry என்பது Blackberry நிறுவன அலைபேசிகளில் மட்டும், Symbian என்பது நோக்கியா அலைபேசிகளில் மட்டுமே.

சுவனத்தைப் பெற்றுத்தரும் முன் பின் சுன்னத்துக்கள்

ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை. (51:56)தன்னால் படைக்கப்பட்ட மனிதன் தன்னை வணங்க வேண்டும் என்று கட்டளையிட்ட இறைவன் கட்டாயம் செய்ய வேண்டிய கடமைகள் என்றும் செய்தால் நிறைய நன்மைகள் கிடைக்கும், செய்யாவிட்டால் பாவமாக கருதப்படாத கடமைகள் என்றும் இறைவன் இரு வகையான கடமைகளை மனிதர்கள் மீது சுமத்தியிருக்கிறான்.
உதாரணமாக ஒரு நாளைக்கு ஐந்த நேரம் தொழுவது அனைத்து முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமையாகும். இதே நேரம் ஐந்து நேரத் தொழுகைகளுக்கு முன் சுன்னத்தான தொழுகைகள் என்று இறைவன் சில தொழுகைகளை ஏற்படுத்தியுள்ளான். இவை கட்டாயக் கடமையாக இல்லையென்றாலும், இவற்றை செய்யும் போது மிகச் சிறப்பான நன்மைகள் கிடைக்கும்.
பொதுவாக இறைவனுக்காக நாம் செய்யும் அனைத்துக் காரியங்களிலும் சில சில தவறுகள் நடக்கும் இந்தத் தவறுகளை அவ்வப்போது நாம் செய்யும் சுன்னத்தான காரியங்கள் ஈடு செய்துவிடும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்: யார் எனது நேசரைப் பகைத்துக் கொள்கிறாரோ அவருடன் நான் போர் தொடுக்கின்றேன். நான் என் அடியான் மீது கடமையாக்கியிருக்கும் வணக்கத்தின் மூலமாகவே என் அடியான் எனக்கு நெருக்கமாகின்றான். அதுவே எனக்குப் பிரியமான வணக்கமாகும்.

முஸ்லிம்களுக்கிடையில் பிரிவுகள் ஏன்?...

கேள்வி 1 :

இஸ்லாமிய மார்க்கத்தில் சன்னி, ஷியா, ஷேக், சையத் போன்ற பல பிரிவுகள் உள்ளன. இஸ்லாத்தை நான்கு பிரிவுகளாகப் பிரித்திருப்பதின் நோக்கம் என்ன? இந்து மதத்தில் உள்ள நான்கு வர்ணங்களைப் பின்பற்றுவதாக இது அமைந்துள்ளதே? உ.பி.யிலும், பாகிஸ்தானிலும் சன்னி முஸ்லிம்களுக்கும், ஷியா முஸ்லிம்களுக்கும் இடையில் சண்டைகள் நடப்பது ஏன்?

கேள்வி 2:

முஸ்லிம்களிடத்திலும் ஜாதிப் பிரிவுகள் இருப்பதாக என் இந்து நண்பர் கூறினார். மற்ற பிரிவுகளுக்கு விளக்கம் சொல்லும் என்னால் ஷியா-சன்னி பிரிவுக்கு விளக்கம் தர முடியவில்லை?

கேள்வி 3 :

முஸ்லிம்களிடையே சாதிப் பிரிவுகள் இல்லை என்று கூறுகின்றீர்கள். ஆனால், திருமண விளம்பரங்கள் வெளியிடும் போது மரைக்காயர், இராவுத்தர், லெப்பை போன்ற பிரிவுகளின் பெயரிலே வெளியிடுகின்றனரே எதனால்?

பதில்:

இஸ்லாமிய மாக்கத்தில் இத்தகைய பிரிவுகள் இருப்பதாகக் கூறுவது தவறாகும். முஸ்லிம்களிடம் ஏன் இந்தப் பிரிவுகள் என்று தான் கேள்வி அமைந்திருக்க வேண்டும்.

இத்தகைய பிரிவுகளை திருக்குர்ஆனும் அனுமதிக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அனுமதிக்கவில்லை என்றாலும் முஸ்லிம்களிடம் இத்தகைய பிரிவுகள் உள்ளதை மறுக்க முடியாது.

ஆனால் இந்து மதத்தில் உள்ள நான்கு வர்ணங்களைப் போன்றதாக முஸ்லிம்களிடம் காணப்படும் பிரிவை ஒப்பிட எந்த நியாயமும் இல்லை.

Sunday 4 November 2012

TNTJ லப்பைக்குடிக்காடு துபை அமர்வு நவம்பர்-2012

ஏக நாயன் அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லெப்பைக்குடிக்காடு ஊர் கூட்டமைப்பின் வழமையான மாதாந்திர அமர்வின் நவம்பர் மாத அமர்வு 02/11/2012 வெள்ளிக்கிழமை மஃரிப் முதல் இஷா வரை துபை மண்டல தலைமை மர்கஸில் சிறப்புடன் நடைப்பெற்றது.
 
சகோதரர் அப்துல் மஜீது அவர்களுடைய தலைமையில் அமர்வு துவங்கியது.
அதைத் தொடர்ந்து இறை நினைவூட்டலான மார்க்க பயான் செய்யப்பட்டது.

Followers