பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளில், செப். 12-ம் தேதி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது என்றார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 2012-13-ம் ஆண்டுக்கு நில அபிவிருத்திப் பணிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் சிறு, குறு விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களில் பணிகள் மேற்கொள்வதற்கு விவசாயிகள் பட்டியல் வைக்கப்பட்டு அங்கீகாரம் பெறுதல். தேசிய கால் மற்றும் வாய் நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் வரும் 15-ம் தேதி முதல் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல் மற்றும் 19-வது கால்நடை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளுதல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானிக்கப்பட உள்ளது.
இக்கூட்டத்தில், சம்பந்தப்பட்ட மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கிராம பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டும். கூட்டத்தை கண்காணிக்க, ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரால் பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, இக்கூட்டத்தில், கிராமப் பொதுக்கள் அதிகளவு கலந்துகொண்டு ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுத்து, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் அவர்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது