பாப்புலர் ஃப்ரண்ட்
ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்
துறை சார்பாக ஆகஸ்ட் மாதம் செய்த நிவாரண
பணிகள்
முஸ்லிம் சமூகத்தில் பின்தங்கி இருக்கும் மக்களை வலிமைப்படுத்துவதேயே நோக்கமாக
கொண்டு செயல்பட்டு வரும் சமூக பேரியக்கமே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. இதன்
ஒரு அங்கமாக சமூகத்தை அனைத்து துறைகளிலும் சக்திபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக மேம்பாட்டுத் துறையின் மூலமாக பல பணிகளை
செய்து வருகிறது.
அதன் ஒரு
அங்கமாக கடந்த மாதம் தமிழ்நாடு முழுவதும் சமூக மேம்பாட்டுத் துறை (Community
Development) சார்பாக 856 நபர்களுக்கு பெருநாள் துணி வழங்கப்பட்டது.
மேலும் பள்ளி
செல்வோம் (School
Chalo) பிரச்சாரம்
வாயிலாக தமிழ்நாட்டில் மட்டும் 4042 கல்வி உபகரணங்கள் (School
Kit) வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில்
மட்டும் பல்வேறு பட்ட மருத்துவ சிகிச்சைக்கு உதவிதொகையாக ரூ 73,700 /- வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில்
பின்தங்கி இருக்கும் மக்களுக்கு சுய தொழில்
செய்வதற்கான உதவி தொகை தமிழ்நாட்டில்
மட்டும் ரூ 9900
/-
வழங்கப்பட்டுள்ளது.
மாணவ
மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையாக ரூ 42,850 /- வழங்கப்பட்டுள்ளது.
பிற இதர
உதவிகளாக தமிழ்நாட்டில் மட்டும் ரூ 1,43,300 /-
வழங்கப்பட்டுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக மேம்பாட்டு துறை சார்பாக
கடந்த மாதம்
மட்டும் மொத்தம் ரூ 7,72,330
/- நிவாரண உதவியாக
பொருளாதாரத்தில் பின்தங்கிருக்கும் மக்களுக்கு வழங்கியுள்ளது.
தகவல் மின்அஞ்சல் மூலம்
அ.முஹம்மது உசேன்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
லெப்பைக்குடிக்காடு.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது